Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹன்சிகாவுக்கு எதிராக போலீசுக்கு செல்லும் 'போக்கிரி ராஜா' தயாரிப்பாளர்?
சென்னை: நடிகை ஹன்சிகாவுக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்க, தயாரிப்பாளர் செல்வகுமார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் வெளியாகி தோல்வியைத் தழுவிய படம் 'போக்கிரி ராஜா'. ஜீவாவின் 25 வது படமாக வெளியான இப்படத்தை 'புலி' புகழ் செல்வகுமார் தயாரித்திருந்தார்.
இப்படத்தின் பிரஸ் மீட்டுக்கு வருவதாக கூறிய ஹன்சிகா கடைசி நேரத்தில் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் '' போக்கிரி ராஜா பிரஸ் மீட்டுக்கு வருவதாக உறுதி கூறிய ஹன்சிகா கடைசி நேரத்தில் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
பயணம் மற்றும் அவரின் தங்குமிடம் போன்றவற்றிற்கு மட்டும் சில லட்சங்களை செலவழித்து இருக்கிறேன். எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என ஹன்சிகா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.
ஆனால் ஹன்சிகா தரப்பிலிருந்து இதற்கான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. இதனால் நான் செலவு செய்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என போலீசில் ஹன்சிகா மீது புகார் கொடுக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
'போகன்' தவிர வேறு தமிழ்ப்படங்கள் எதுவும் ஹன்சிகா கைவசம் இல்லாததால், தற்போது அவரின் கவனம் தெலுங்குத் திரையுலகின் மீது பதிந்திருக்கிறது.