Don't Miss!
- News "வாழ்க திராவிட மாடல்".. 'இது என்ன கொடுமை?' பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஹன்சிகாவுக்கு எதிராக போலீசுக்கு செல்லும் 'போக்கிரி ராஜா' தயாரிப்பாளர்?
சென்னை: நடிகை ஹன்சிகாவுக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்க, தயாரிப்பாளர் செல்வகுமார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் வெளியாகி தோல்வியைத் தழுவிய படம் 'போக்கிரி ராஜா'. ஜீவாவின் 25 வது படமாக வெளியான இப்படத்தை 'புலி' புகழ் செல்வகுமார் தயாரித்திருந்தார்.
இப்படத்தின் பிரஸ் மீட்டுக்கு வருவதாக கூறிய ஹன்சிகா கடைசி நேரத்தில் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் '' போக்கிரி ராஜா பிரஸ் மீட்டுக்கு வருவதாக உறுதி கூறிய ஹன்சிகா கடைசி நேரத்தில் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
பயணம் மற்றும் அவரின் தங்குமிடம் போன்றவற்றிற்கு மட்டும் சில லட்சங்களை செலவழித்து இருக்கிறேன். எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என ஹன்சிகா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.
ஆனால் ஹன்சிகா தரப்பிலிருந்து இதற்கான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. இதனால் நான் செலவு செய்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என போலீசில் ஹன்சிகா மீது புகார் கொடுக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
'போகன்' தவிர வேறு தமிழ்ப்படங்கள் எதுவும் ஹன்சிகா கைவசம் இல்லாததால், தற்போது அவரின் கவனம் தெலுங்குத் திரையுலகின் மீது பதிந்திருக்கிறது.