Don't Miss!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
தயாரிப்பாளரிடம் வாங்கிய ரூ 2 லட்சத்தை திருப்பித் தர மறுப்பு: நடிகை ஹரிப்ரியா மீது புகார்
சென்னை: தயாரிப்பாளர் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்ததால், நடிகை ஹரிப்ரியா மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஹரிப்ரியா
வல்லக்கோட்டை, வாராயோ வெண்ணிலாவே, முரண் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர், ஹரிப்ரியா. கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
கன்னடத்தில்
இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த ‘உக்கிரம்' என்ற கன்னட படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அதைத்தொடர்ந்து ‘ப்ளை,' ‘ரணதந்திரா' ஆகிய புதிய கன்னட படங்களில் இவர் கதாநாயகியாக ஒப்பந்தமானார்.
ரூ.2 லட்சம்
‘பிளை' படத்தில் நடிப்பதற்காக, ஹரிப்ரியாவுக்கு ரூ.6 லட்சம் சம்பளம் பேசி, ரூ.2 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் தொடங்க வேண்டிய ‘ப்ளை' படத்தின் படப்பிடிப்பு, ஹரிப்ரியா ‘கால்ஷீட்' கொடுக்காததால் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது.
சுதீப்புடன்
இந்த நிலையில் ஹரிப்ரியா, சுதீப் ஜோடியாக ஒரு புதிய கன்னட படத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு நடித்தார்.
பழக்கமில்லையே
இதனால், ‘ப்ளை' படத்தின் தயாரிப்பாளர் ஹரிப்ரியாவிடம் சென்று தனது முன்பணம் ரூ.2 லட்சத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டார். அதற்கு ஹரிப்ரியா மறுத்ததுடன், முன்பணத்தை திருப்பிக் கொடுத்து தனக்கு பழக்கம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
புகார்
அதைத்தொடர்ந்து, ஹரிப்ரியா மீது ‘பிளை' படத்தின் தயாரிப்பாளர் கன்னட நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். ‘ப்ளை' படத்தில் இருந்து ஹரிப்ரியாவை நீக்கிவிட்டு, நிதி சுப்பையாவை அவர் ஒப்பந்தம் செய்து, படப்பிடிப்பையும் தொடங்கி விட்டார்.