Don't Miss!
- News கொய்யாப்பழத்தை பார்த்ததுமே.. பாய்ந்து வந்த 2 ஆடுகள்.. பின்னாடியே ஓடிசென்ற முருகன்.. திணறிய தென்காசி
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தயாரிப்பாளரிடம் வாங்கிய ரூ 2 லட்சத்தை திருப்பித் தர மறுப்பு: நடிகை ஹரிப்ரியா மீது புகார்
சென்னை: தயாரிப்பாளர் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்ததால், நடிகை ஹரிப்ரியா மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஹரிப்ரியா
வல்லக்கோட்டை, வாராயோ வெண்ணிலாவே, முரண் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர், ஹரிப்ரியா. கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
கன்னடத்தில்
இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த ‘உக்கிரம்' என்ற கன்னட படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அதைத்தொடர்ந்து ‘ப்ளை,' ‘ரணதந்திரா' ஆகிய புதிய கன்னட படங்களில் இவர் கதாநாயகியாக ஒப்பந்தமானார்.
ரூ.2 லட்சம்
‘பிளை' படத்தில் நடிப்பதற்காக, ஹரிப்ரியாவுக்கு ரூ.6 லட்சம் சம்பளம் பேசி, ரூ.2 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் தொடங்க வேண்டிய ‘ப்ளை' படத்தின் படப்பிடிப்பு, ஹரிப்ரியா ‘கால்ஷீட்' கொடுக்காததால் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது.
சுதீப்புடன்
இந்த நிலையில் ஹரிப்ரியா, சுதீப் ஜோடியாக ஒரு புதிய கன்னட படத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு நடித்தார்.
பழக்கமில்லையே
இதனால், ‘ப்ளை' படத்தின் தயாரிப்பாளர் ஹரிப்ரியாவிடம் சென்று தனது முன்பணம் ரூ.2 லட்சத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டார். அதற்கு ஹரிப்ரியா மறுத்ததுடன், முன்பணத்தை திருப்பிக் கொடுத்து தனக்கு பழக்கம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
புகார்
அதைத்தொடர்ந்து, ஹரிப்ரியா மீது ‘பிளை' படத்தின் தயாரிப்பாளர் கன்னட நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். ‘ப்ளை' படத்தில் இருந்து ஹரிப்ரியாவை நீக்கிவிட்டு, நிதி சுப்பையாவை அவர் ஒப்பந்தம் செய்து, படப்பிடிப்பையும் தொடங்கி விட்டார்.