twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளரிடம் வாங்கிய ரூ 2 லட்சத்தை திருப்பித் தர மறுப்பு: நடிகை ஹரிப்ரியா மீது புகார்

    By Shankar
    |

    சென்னை: தயாரிப்பாளர் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்ததால், நடிகை ஹரிப்ரியா மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    ஹரிப்ரியா

    ஹரிப்ரியா

    வல்லக்கோட்டை, வாராயோ வெண்ணிலாவே, முரண் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர், ஹரிப்ரியா. கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

    கன்னடத்தில்

    கன்னடத்தில்

    இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த ‘உக்கிரம்' என்ற கன்னட படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

    அதைத்தொடர்ந்து ‘ப்ளை,' ‘ரணதந்திரா' ஆகிய புதிய கன்னட படங்களில் இவர் கதாநாயகியாக ஒப்பந்தமானார்.

    ரூ.2 லட்சம்

    ரூ.2 லட்சம்

    ‘பிளை' படத்தில் நடிப்பதற்காக, ஹரிப்ரியாவுக்கு ரூ.6 லட்சம் சம்பளம் பேசி, ரூ.2 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் தொடங்க வேண்டிய ‘ப்ளை' படத்தின் படப்பிடிப்பு, ஹரிப்ரியா ‘கால்ஷீட்' கொடுக்காததால் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது.

    சுதீப்புடன்

    சுதீப்புடன்

    இந்த நிலையில் ஹரிப்ரியா, சுதீப் ஜோடியாக ஒரு புதிய கன்னட படத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு நடித்தார்.

    பழக்கமில்லையே

    பழக்கமில்லையே

    இதனால், ‘ப்ளை' படத்தின் தயாரிப்பாளர் ஹரிப்ரியாவிடம் சென்று தனது முன்பணம் ரூ.2 லட்சத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டார். அதற்கு ஹரிப்ரியா மறுத்ததுடன், முன்பணத்தை திருப்பிக் கொடுத்து தனக்கு பழக்கம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

    புகார்

    புகார்

    அதைத்தொடர்ந்து, ஹரிப்ரியா மீது ‘பிளை' படத்தின் தயாரிப்பாளர் கன்னட நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். ‘ப்ளை' படத்தில் இருந்து ஹரிப்ரியாவை நீக்கிவிட்டு, நிதி சுப்பையாவை அவர் ஒப்பந்தம் செய்து, படப்பிடிப்பையும் தொடங்கி விட்டார்.

    English summary
    Kannada Producer gave a complaint on actress Haripriya for not returning his money.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X