twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பின்னாலேயே வருகிறார்: 'சைக்கோ' ரசிகரால் பயத்தில் இருக்கும் டாப்ஸி

    By Siva
    |

    மும்பை: தான் எங்கு சென்றாலும் தன்னை பின்தொடரும் சைக்கோ ரசிகர் மீது போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளார் நடிகை டாப்ஸி.

    ஆடுகளம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் டாப்ஸி. தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். தற்போது டாப்ஸி இந்தி படங்களில் பிசியாக உள்ளார். டாப்ஸிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும் ஒரு சைக்கோ ரசிகரால் அவர் மனம் நொந்து போயுள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்,

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    எங்கள் எல்லாருக்கும் ரசிகர்களை மிகவும் பிடிக்கும். என்னையும், என் படங்களையும் மக்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் எனது பிரைவசியும் முக்கியும், அதையும் ரசிகர்கள் மதிக்க வேண்டும்.

    பயம்

    பயம்

    யாராவது எல்லை தாண்டி நடந்து கொண்டால் பிறரை போன்று நாங்களும் அஞ்சுவோம். ஒரு ரசிகர் நான் எங்கு சென்றாலும் என்னை பின் தொடர்ந்து வருகிறார். அவர் என்னிடம் பேசியுள்ளார்.

    பின்தொடர்தல்

    பின்தொடர்தல்

    அந்த குறிப்பிட்ட ரசிகர் நான் படப்பிடிப்பில் இருந்தபோது பாதுகாவலர்களை எல்லாம் தாண்டி வந்து என்னை சந்தித்தார். அது எனக்கு பயத்தை அளித்தது.

    போலீஸ்

    போலீஸ்

    அவர் இதுவரை என்னை காயப்படுத்தியது இல்லை. அதனால் நான் போலீசில் புகார் அளிக்கவில்லை. ஆனால் இனியும் அவர் என்னை பின்தொடர்ந்தால் நிச்சயம் போலீசில் புகார் அளிப்பேன்.

    English summary
    Actress Tapsee is scared of a psycho fan who follows her wherever she goes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X