Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பாம்புக்கே பயப்படாத ஹீரோயின் இவர்!
பாம்பென்றால் படையும் நடுங்கும்.. ஒரு சினிமா ஹீரோயின் எம்மாத்திரம்? ஆனால் இந்த வழக்குச் சொல்லை உடைத்தெறிந்திருக்கிறார் ஒரு நாயகி. அவர்தான் காவல் பட தயாரிப்பாளர் கம் ஹீரோயின் கீதா. ஆங்.. புன்னகைப்பூ கீதா.
அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களைத் தயாரித்த பின் கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்த கீதா, இப்போது நாகேந்திரன் இயக்கத்தில் காவல் என்ற படத்தை தயாரித்து, நாயகியாகவும் நடிக்கிறார்.
நாளை படம் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை கீதா சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
அதில் ஒன்றுதான் இந்த பாம்பு சமாச்சாரம். காவல் படத்திற்காக கேரளாவில் படப்பிடிப்பு நடந்தபோது, அந்தப் பக்கம் வந்துவிட்ட ஒரு நல்ல பாம்பை ஒன்றை அவர் சர்வசாதாரணமாக பிடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
படமெடுத்து ஆடிய அந்தப் பாம்பைப் பார்த்து, "படம் பிடிப்பவருக்கு உன் படத்தைக் காட்டு' என்று கூறி போஸ் கொடுக்க வைத்தாராம்!