Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அட இந்த பிரபல நடிகைக்கு இப்டி ஒரு நிலைமையா.. மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு மும்பைக்கு ஓடிட்டாராமே
தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகை ராசி கண்ணா, ஐதராபாத் வீட்டை காலி செய்துவிட்டு, மும்பைக்கு கிளம்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐதராபாத்: நடிகை ராசி கண்ணா ஐதராபாத் வீட்டை காலி செய்துவிட்டு, மும்பைக்கு பறந்துவிட்டாராம்.
மெட்ராஸ் கபே இந்தி படம் மூலம் நடிக்க வந்தவர் நடிகை ராசி கண்ணா. பின்னர் சூப்பர் ஹிட் படமான 'மனம்' மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராசி கண்ணா, மலையாளம் மற்றும் தமிழ் படங்களிலும் நடித்தார். இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரும் இருக்காராமே... அஜித்தின் 'வலிமை'யில் விஜய்யின் ஒல்லி பெல்லி ஹீரோயின்
சொந்த வீடு
தெலுங்கில் பிஸியான நடிகையாக இருந்ததால், ஐதராபாத்தில் சொந்தமாக பிளாட் ஒன்றை ராசி கண்ணா வாங்கினார். அங்கு தான் அவர் பெரும்பாலும் வசித்து வந்தார். தெலுங்கில் பிஸியான நடிகையாக இருந்ததால், ஐதராபாத்தில் சொந்தமாக பிளாட் ஒன்றை ராசி கண்ணா வாங்கினார். அங்கு தான் அவர் பெரும்பாலும் வசித்து வந்தார்.
குறைந்த மார்க்கெட்
இந்த சூழலில் தெலுங்கில் அவருக்கு மார்க்கெட் குறைந்து வருகிறது. வெங்கி மாமா, பிரதி ரோஜூ பண்டகே, வேர்ல்ட் பேமஸ் லவ்வர் ஆகிய படங்களை தவிர புதிய படங்கள் எதுவும் அவர் வசம் இல்லை. இதனால் அவர் மும்பைக்கு சென்று பாலிவுட் படங்களை கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறார்.
மும்பைக்கு பறந்தார்
எனவே அவர் தனது ஐதராபாத் பிளாட்டை காலி செய்துவிட்டு மும்பைக்கு பறந்துவிட்டார். தற்போது அந்த வீட்டை தெலுங்கு குடும்பம் ஒன்றிற்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் ராசி கண்ணா. இதனால் அவரது தெலுங்கு ரசிகர்கள் அப்செட்டில் இருக்கிறார்களாம்.
இந்தி படங்கள்
ரகுல் பிரீத் சிங், டாப்சி ஆகியோர் போன்று பாலிவுட்டிலேயே செட்டிலாகும் யோசனையில் ராசி கண்ணா இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். ஆனால் 2013ம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கபே படத்திற்கு பிறகு, அவர் வேறு எந்த இந்தி படத்திலும் நடிக்கவில்லை. ஆகவே எந்த தைரியத்தில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என டோலிவுட்டில் பேச்சாக இருக்கிறது.