எல்லா ஆண்களும் அப்படித்தான்.. அவங்கள பார்த்து ரொம்பவே ஏங்குவேன்.. ரச்சிதா ஓபன் டாக்
சென்னை: சின்னத்திரை மூலம் ஃபேமஸ் ஆனவர் ரச்சிதா. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலம் ஆன அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனிலும் கலந்துகொண்டார். ஆனால் அந்த சீசனில் டைட்டில் வின்னராக மாற முடியவில்லை. இதற்கிடையே காதலித்து திருமணம் செய்துகொண்ட தினேஷை பிரிந்தார். இப்போது ஃபையர், எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் ரச்சிதா அளித்திருக்கும் சமீபத்திய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு அவரது அழகுக்கும், நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் ரச்சிதா. தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிய திரை கலைஞர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்களோ அதேபோல் சின்னத்திரை நடிகர், நடிகைகளையும் கொண்டாடுவது வழக்கம். அதனை பயன்படுத்தி பலர் வளர்ந்திருப்பதும் இங்கு நடந்திருக்கிறது.

தமிழில் ரச்சிதா: அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் அறிமுகமான ரச்சிதாவுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக தன்னுடைய கலரை மாற்றிக்கொண்டு நடித்தது பலரின் அப்ளாஸை அள்ளியது. அந்த சீரியல் ஹிட்டடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதன்படி அதே சேனலில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வில் நடித்தார். அந்த சீரியல் ரச்சிதாவுக்கு மேலும் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது.
திருமணம்: இந்த சூழலில் பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் மேட் ஃபார் ஈச் அதராக வாழ்ந்துகொண்டிருந்த சூழலில் திடீரென இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. கடந்த பல மாதங்களாக இரண்டு பேரும் பிரிந்தே வாழ்ந்து வருகிறார்கள்.
பிக்பாஸ் 6: நிலைமை இப்படி இருக்க பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் ரச்சிதா. அதில் தனது திறமையை பயன்படுத்தி விளையாண்ட அவர் சில வாரங்கள் தாக்குப்பிடித்தார். அவர் வீட்டுக்குள் இருந்தபோது அவரிடம் ராபர்ட் மாஸ்டர் பேசிய விஷயங்கள் அனைத்துமே ட்ரெண்டாகின. மேலும் அவர்களை வைத்து பல மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டனர்.
படங்கள்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு நடிகை ரச்சிதா சில படங்களிலும் நடித்துவருகிறார். அந்தவகையில் தற்போது அவர் Fire என்ற படத்திலும் நடித்துவருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் தொடர்பான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கொஞ்சம் தூக்கலான கிளாமரோடு தோன்றியிருந்தார் ரச்சிதா. அது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்தப் படம் தவிர்த்து எக்ஸ்ட்ரீம் என்ற படத்திலும் நடித்துவருகிறார் ரச்சிதா மகாட்சுமி.
ரச்சிதா பேட்டி: இந்நிலையில் ரச்சிதா சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ஒரு இடத்துக்கு கிளம்ப வேண்டுமென்றால் ஆண்கள் ஐந்து நிமிடங்களில் கிளம்பிவிடுவார்கள். ஆனால் பெண்களுக்கோ 30 நிமிடங்கள்வரை ஆகும். எல்லா ஆண்களுமே சீக்கிரம் கிளம்பிவிடுவார்கள். அதை பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். பெண்கள் எப்போதும் தனது உடையில் அதிக கவனம் செலுத்துவதன் காரணமாக இந்தத் தாமதம் ஏற்படுகிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











