Don't Miss!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- News சென்னையை விடுங்க! சர்ரென முன்னேறிய தூத்துக்குடி, பெரம்பலூர், ராணிப்பேட்டை! உலகமே திரும்பி பார்க்குதே
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ. 90க்கு விற்பனையாகும் ராதிகா ஆப்தேவின் ஆபாச பட டிவிடி
சென்னை: நடிகை ராதிகா ஆப்தேவின் பார்ச்ட் படத்தில் வரும் நிர்வாண காட்சிகள் ஆபாச படம் என்று கூறி ரூ.90க்கு டிவிடிகளாக விற்பனையாகி வருகிறது.
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் லீனா யாதவ் இயக்கத்தில் ராதிகா ஆப்தே, ஆதில் ஹுசைன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பார்ச்ட். வெளிநாட்டில் வெளியாகி சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது.
இந்நிலையில் பார்ச்ட் படம் வரும் 28ம் தேதி இந்தியாவில் ரிலீஸாகிறது.
ராதிகா ஆப்தே
பார்ச்ட் படத்தில் ராதிகா ஆப்தே, ஆதில் ஹுசைன் வரும் நிர்வாண படுக்கையறை காட்சிகள் இணையதளங்களில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. காட்சிகள் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆபாச டிவிடி
ராதிகா, ஹுசைன் வரும் நிர்வாண காட்சிகள் தற்போது ஆபாச படமாக ரூ.90க்கு கொல்கத்தா சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இது குறித்து அஜய் தேவ்கன் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளாராம்.
விளம்பரம்
இணையதளத்தில் ராதிகா ஆப்தேவின் நிர்வாண காட்சிகளை விளம்பரத்திற்காக தாங்கள் கசியவிடவில்லை என்று பார்ச்ட் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த ஆபாச டிவிடி விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபாசம் இல்லை
பார்ச்ட் படத்தில் வரும் படுக்கையறை காட்சிகள் உணர்ச்சியை தூண்டும் வகையிலோ, ஆபாசமாகவோ இல்லை. அது கலைநயத்துடன் எடுக்கப்பட்டுள்ளது என்கிறது படக்குழு.