ஹீரோயின்
இரண்டு சுற்று அதிகம் பெருத்தாலோ என்னவோ ராதிகா செளத்ரிக்கு தமிழில் இரண்டாம் சுற்றில்நிறைய வாய்ப்புக்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. எல்லாம் சிங்கிள் டான்ல் தான்.
இங்கே சான்ஸே இல்லாததால் மூட்டை, முடிச்சுகளோடு மும்பைக்குப் போனார். அங்கு டிவிசீரியல்களில் துக்கடா வேடங்கள்ல் தலைகாட்டி வந்தார். இந் நிலையில் கன்னடத்தில் ஜக்கேஷ்போன்ற முகம் தெரியாத ஹீரோக்களுடன் நடிக்க சான்ஸ் கிடைத்தது.
இதற்காக பெங்களூர் வரை வந்து போன அவர், அப்படியே சென்னைக்கு வந்து தான் முன்பு நடித்தபடங்களின் தயாரிப்பாளர்களைச் சந்தித்து சான்ஸ் கேட்டார். இதனால் ராம்கி-சங்கவி நடிக்கும்இரண்டு பேர் படத்தில் ஒரு டான்ஸ் ஆட சான்ஸ் கிடைத்தது.
அதில் சங்கவியுடன் போட்டிபோட்டுக் கொண்டு ராதிகா காட்டிய கவர்ச்சியும் வேகமும் அவருக்கு இப்போது மேலும் பலசான்ஸ்களைப் பெற்றுத் தந்துள்ளது.
இப்போது காஷ்மீர் என்ற படத்திலும் காதல் டாட் காம் என்ற படத்திலும் ஒரு பாட்டுக்கு ஒருபாட்டுக்கு டான்ஸ் ஆட சான்ஸ் கிடைத்துள்ளது.
படத்தில் ஆடுவதோடு மட்டுமல்லாமல் ஒரு சிலசீன்களிலும தலை காட்ட வாய்ப்பு தருமாறு தயாரிப்பாளர்களிடம் ராதிகா செல்லமாக சிணுங்க,அதைத் தட்ட முடியாத தயாரிப்பாளர்கள் மனசு வைத்ததால் அப்படி சில சீன்களிலும்நடித்துவிட்டார்.
சம்பள விஷயம் மட்டுமல்லாமல் எல்லா விஷயத்திலும் விட்டுக் கொடுத்து போவதால் ராதிகாகாட்டில் இப்போது மழை.


Click it and Unblock the Notifications











