நீயா, நானா?: படப்பிடிப்பில் பலப்பரீட்சையில் இறங்கிய நடிகைகள் லட்சுமி ராய், ராகினி திவேதி
பெங்களூர்: கன்னட நடிகை ராகினி திவேதியும், நடிகை லட்சுமி ராயும் பொது இடத்தில் பலப்பரீட்சையில் இறங்கியுள்ளனர்.
அடடே லட்சுமி ராய் கன்னட திரையுலகிற்கு சென்று அங்குள்ள நடிகை ராகினி திவேதியிடம் சண்டை போட்டுள்ளாரா என சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டாம். ஸ்ருங்காரா என்ற கன்னட படத்தில் ராகினியும், லட்சுமி ராயும் சேர்ந்து நடிக்கிறார்கள்.

அந்த படத்தின் படப்பிடிப்பில் இரண்டு நடிகைகளும் பலசாலியை கண்டறிய முயற்சி கூட செய்யவில்லை புகைப்படத்திற்கு போஸ் தான் கொடுத்துள்ளனர்.
படத்தில் இருவரும் தோழிகளா அல்ல எதிரிகளா என்று தெரியவில்லை. ஆனால் புகைப்படத்திற்கு சந்தோஷமாக சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளனர். அதை வைத்து தற்போதைக்கு அவர்களுக்குள் லடாய் எதுவும் இல்லை என்று நம்புவோம்.
லட்சுமி ராய் கைவசம் இருக்கும் ஒரே கன்னட படம் இது தான்.
Comments


Click it and Unblock the Notifications