Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நடிகையால் சண்டை, ஆர்.டி.ஓ. அதிகாரி மண்டை உடைப்பு: நள்ளிரவில் பரபரத்த ஸ்டார் ஹோட்டல்
பெங்களூர்: நடிகை ராகினி திவேதியுடன் சாப்பிட்டதால் ஆர்.டி.ஓ. அதிகாரியை அவரின் நண்பர் பீர் பாட்டிலால் தாக்கினார்.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் ராகினி திவேதி. ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படத்தில் நடித்துள்ளார். அவர் தனது நண்பரான ஆர்.டி.ஓ. அதிகாரி ரவிசங்கருடன் பெங்களூர் ரெசிடென்சி சாலையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்.
இரவு 11.45 மணி அளவில் ராகினியின் மற்றொரு நண்பரான சிவபிரகாஷ் அதே ஹோட்டலுக்கு வந்தார்.
எம்.ஜி.ஆர். பாட்டை சுட்டு, விஜய் சேதுபதி ட்ரெய்லரை சுட்டு தலைப்பு வெளியிட்ட சிவகார்த்திகேயன்
ராகினி
ஹோட்டலில் ராகினியுடன் ரவிசங்கரை பார்த்த சிவபிரகாஷ் கோபம் அடைந்தார். இதையடுத்து அவர் ராகினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பீர் பாட்டிலை எடுத்து ரவியின் தலையில் உடைத்தார். இதில் காயம் அடைந்த ரவி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
போலீஸ்
சிகிச்சைக்கு பிறகு நேராக காவல் நிலையத்திற்கு சென்று சிவபிரகாஷ் மீது புகார் அளித்தார் ரவிசங்கர். அவரின் புகாரின்பேரில் போலீசார் சிவபிரகாஷ் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாக்குவாதம்
சம்பவம் குறித்து ரவிசங்கர் கூறியதாவது, நான், ராகினி மற்றும் சில நண்பர்களுடன் டின்னர் சாப்பிட சென்றேன். ஹோட்டலுக்கு வந்த சிவபிரகாஷ் நீ எதற்காக ராகினியுடன் வந்தாய் என்று கேட்டு என்னை திட்டினார். திடீர் என்று என் முகத்தில் குத்தியதுடன், பீர் பாட்டிலால் தாக்கினார் என்றார்.
உயிருக்கு ஆபத்து
என் நண்பர்கள் தான் சிவபிரகாஷிடம் இருந்து என்னை காப்பாற்றினார்கள். சிவபிரகாஷ் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. சிவபிரகாஷ் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ரவிசங்கர்.
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!