Don't Miss!
- News வாய்தா மேல் வாய்தா! நடிகை விஜயலட்சுமி ஏப்ரல் 2ல் ஆஜராக அவகாசம்.. சீமான் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை! ராதிகா ஆப்தே
ரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை, அன்பானவரை நான் திரையிலும் சரி, நிஜத்திலும் சரி... பார்த்ததே இல்லை என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
கபாலியில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. அதற்கு முன் தமிழில் மூன்று படங்களில் நடித்திருந்தார். சில தெலுங்குப் படங்களிலும், ஏராளமான இந்திப் படங்களிலும் அவர் நடித்திருந்தார். பல சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்து பரபரப்பு கிளப்பிய ராதிகா ஆப்தே, சமீபத்தில் தன்னிடம் சிலுமிஷம் செய்த தெலுங்கு ஹீரோ ஒருவரை அறைந்துவிட்டதாகக் கூறி அதிர வைத்தார். அந்த நடிகர் தெலுங்கு சினிமாவில் அதிகாரமிக்கவர் என்றும் அடையாளம் காட்டினார்.
இந்த நிலையில் கபாலியில் நடித்த அனுபவம் குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் கபாலி. குறிப்பாக ரஜினிகாந்த். மிக அருமையான, அற்புதமான மனிதர் அவர். இப்படி ஒருவரை நிஜத்திலும் சரி, திரையிலும் சரி நான் சந்தித்ததே இல்லை. அவரது படப்பிடிப்பு மாதிரி ஒழுங்கான பாதுகாப்பான படப்பிடிப்புகள் அரிது," என்று கூறியுள்ளார்.