Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ராஜ் தாக்கரேவை எதிர்த்து போட்டியிட அஞ்சவில்லை: கட்சி தாவிய நடிகை ராக்கி சாவந்த்
மும்பை: ராஷ்ட்ரிய ஆம் ஆத்மி கட்சியை துவங்கி லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்த நடிகை ராக்கி சாவந்த் குடியரசுக் கட்சியில் சேர்ந்துள்ளார். அவர் மகாராஷ்டிரா முதல்வராக விரும்புகிறார்.
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் ராஷ்ட்ரிய ஆம் ஆத்மி என்ற கட்சியை துவங்கி அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். வடமேற்கு மும்பையில் போட்டியிட்ட அவருக்கு வெறும் 1, 995 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இதையடுத்து கட்சியை கலைத்துவிட்டு வேறு எந்த கட்சிக்கு தாவலாம் என்று இருந்த அவர் முன்னாள் லோக்சபா உறுப்பினரான ராம்தாஸ் அதாவாலேவின் குடியரசு கட்சியில் கடந்த சனிக்கிழமை இணைந்துள்ளார்.
முதல்வர்
இதை சொல்வதற்காக மன்னித்துவிடுங்கள் அதாவாலே ஜி. ஆனால் வருங்காலத்தில் நான் நிச்சயம் மகாராஷ்டிரா முதல்வர் ஆவேன் என்று ராக்கி தெரிவித்துள்ளார்.
ராஜ் தாக்கரே
நான் யாரை பார்த்தும் பயப்படவில்லை. வரும் சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை எதிரித்து போட்டியிட அஞ்சவில்லை என்கிறார் ராக்கி.
ஒத்திகை
லோக்சபா தேர்தலில் மண்ணை கவ்வினீர்களே என்றால் அது ஒத்திகை தற்போது அனுபவத்தோடு போட்டியிடுகிறேன் என்கிறார் ராக்கி.
பதவி
ராக்கி அதாவாலேவின் கட்சியில் சேர்ந்த கையோடு மாநில மகளிர் அணி தலைவி ஆகிவிட்டார். அடுத்து முதல்வர் ஆக துடித்துக் கொண்டிருக்கிறார்.
ராக்கி
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து ராக்கி இன்னும் முடிவு செய்யவில்லை. அவர் போட்டியிட தீர்மானித்தால் அவருக்கு சீட் வழங்கப்படும் என்று ராம்தாஸ் அதாவலே தெரிவித்தார்.