twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இடுப்பை ஏத்தும் ரக்ஷிதா! டன்லப் டயர் போல உப்பி ஊதிப் போயுள்ள ரக்ஷிதா, தனது இடுப்பு பிரதேசத்தை மேலும் மெருகேற்ற புதியஉபாயத்தை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளாராம். சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய் என்று பாடி சிம்புவை தனது இடுப்பில் தூக்கி வைத்து ஆடாதகுறையாக படு கலக்கலாக கவர்ச்சியைக் காட்டி, முதல் படத்திலேயே முழுக்க நனைந்தவர் ரக்ஷிதா. "தம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த இந்த கன்னடத்து முட்டைகோஸ், மதுர படத்தில் விஜய்யுடன்நடித்தபோது ரொம்பவே குண்டாகிப் போய்க் காணப்பட்டார்.விஜய்க்கு அக்கா போல காணப்பட்ட ரக்ஷிதாவின் மதமதப்பான உடம்பு, என்ன காரணத்தாலோ தமிழ்ரசிகர்களை கவராமல் போய் விட்டது. தொடர்ந்து தமிழில் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாத ரக்ஷிதா, தெலுங்கிலும், தாய்மொழியான கன்னடத்திலும் ஊடு கட்டி ஆடி வந்தார்.தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் அந்தரிவாடு என்ற படத்தில் நடித்த ரக்ஷிதா, சிரஞ்சீவிக்கே அக்காபோல தெரிவதாக ரக்ஷிதா காதுபடவே பலரும் பேசியதால், அதிர்ச்சியடைந்து தனது உடம்பைக் குறைக்கும்முயற்சியில் குதித்தார். அதற்கு கைமேல் நல்ல பலன் கிடைத்தது. உடம்பில் எக்ஸ்ட்ராவாக ஏறிக் கிடந்த சதைப்பகுதிகள் காணாமல்போய் சிக்கென ஆனார் ரக்ஷிதா.துயரம் நம்மைத் துரத்துதே என்று தொலைவில் போனால் அங்கே பெருந்துயரம் ஒண்ணு காலைத் தூக்கிதாண்டவமாடுச்சாம். இந்தப் "பொன்மொழியின் அர்த்தம் இப்போது தான் ரக்ஷிதாவுக்கு தெரிய வந்தது.ரக்ஷிதாவின் டயர் உடம்பைத் தேடி வந்த சில தயாரிப்பாளர்கள், அது காணாமல் போனதை அறிந்து அதிர்ந்துவேறு குஜிலிக்களைத் தேடிப் போய் விட்டனர். இப்படியாக தனது "மதமத உடம்புக்காக வந்த 2 படங்களைஇழந்தார் ரக்ஷிதா.உடம்பைக் குறைச்சால் வரும் ஒன்றிரண்டு வாய்ப்பும் போகுதே என்று கவலையடைந்த ரக்ஷிதா, மறுபடியும்உடம்புக்கு உரமேற்ற எக்கச்சக்கமாக சாப்பிட ஆரம்பித்தார். ஆனால் சினிமாவக்கு மிகவும் தேவையானஇடுப்புப் பகுதி மட்டும் உப்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறதாம்.இடுப்பை ஏற்ற என்ன செய்யலாம் என்று சிலரிடம் ஆலோசனை கேட்டபோது, பீர் குடித்தால் பீப்பாய் கணக்காகமாறலாம் என்று ஐடியா சொல்லியுள்ளார்கள். ஆஹா, அருமையான யோசனை (அப்ப, இவ்வளவு நாளா பீர் குடிக்காமலா இந்த பாப்பா பெரிய பீப்பாவாஇருந்துச்சு!) என்று துள்ளிக் குதித்த ரக்ஷி, பீருக்கு மாறும் முடிவுக்கு வந்துள்ளாராம்.அதிலயும் ஒரு குழப்பம் வந்து குத்தாட்டம் போடுகிறதாம், அதாவது சாப்பாட்டுக்கு முன்பு குடிக்கலாமா,இல்லை சாப்பிட்ட பிறகு போடலாமா என்பதுதான் அந்த புதுக் குழப்பம்.பச்சத் தண்ணிக்கே வழியில்லையாம், பருத்திப் பாலு கேட்டானாம் ஒருத்தன் கதையாவுல்ல இருக்குது!

    By Staff
    |

    டன்லப் டயர் போல உப்பி ஊதிப் போயுள்ள ரக்ஷிதா, தனது இடுப்பு பிரதேசத்தை மேலும் மெருகேற்ற புதியஉபாயத்தை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளாராம்.

    சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய் என்று பாடி சிம்புவை தனது இடுப்பில் தூக்கி வைத்து ஆடாதகுறையாக படு கலக்கலாக கவர்ச்சியைக் காட்டி, முதல் படத்திலேயே முழுக்க நனைந்தவர் ரக்ஷிதா.

    "தம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த இந்த கன்னடத்து முட்டைகோஸ், மதுர படத்தில் விஜய்யுடன்நடித்தபோது ரொம்பவே குண்டாகிப் போய்க் காணப்பட்டார்.

    விஜய்க்கு அக்கா போல காணப்பட்ட ரக்ஷிதாவின் மதமதப்பான உடம்பு, என்ன காரணத்தாலோ தமிழ்ரசிகர்களை கவராமல் போய் விட்டது.

    தொடர்ந்து தமிழில் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படாத ரக்ஷிதா, தெலுங்கிலும், தாய்மொழியான கன்னடத்திலும் ஊடு கட்டி ஆடி வந்தார்.

    தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் அந்தரிவாடு என்ற படத்தில் நடித்த ரக்ஷிதா, சிரஞ்சீவிக்கே அக்காபோல தெரிவதாக ரக்ஷிதா காதுபடவே பலரும் பேசியதால், அதிர்ச்சியடைந்து தனது உடம்பைக் குறைக்கும்முயற்சியில் குதித்தார்.

    அதற்கு கைமேல் நல்ல பலன் கிடைத்தது. உடம்பில் எக்ஸ்ட்ராவாக ஏறிக் கிடந்த சதைப்பகுதிகள் காணாமல்போய் சிக்கென ஆனார் ரக்ஷிதா.

    துயரம் நம்மைத் துரத்துதே என்று தொலைவில் போனால் அங்கே பெருந்துயரம் ஒண்ணு காலைத் தூக்கிதாண்டவமாடுச்சாம். இந்தப் "பொன்மொழியின் அர்த்தம் இப்போது தான் ரக்ஷிதாவுக்கு தெரிய வந்தது.

    ரக்ஷிதாவின் டயர் உடம்பைத் தேடி வந்த சில தயாரிப்பாளர்கள், அது காணாமல் போனதை அறிந்து அதிர்ந்துவேறு குஜிலிக்களைத் தேடிப் போய் விட்டனர். இப்படியாக தனது "மதமத உடம்புக்காக வந்த 2 படங்களைஇழந்தார் ரக்ஷிதா.

    உடம்பைக் குறைச்சால் வரும் ஒன்றிரண்டு வாய்ப்பும் போகுதே என்று கவலையடைந்த ரக்ஷிதா, மறுபடியும்உடம்புக்கு உரமேற்ற எக்கச்சக்கமாக சாப்பிட ஆரம்பித்தார். ஆனால் சினிமாவக்கு மிகவும் தேவையானஇடுப்புப் பகுதி மட்டும் உப்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறதாம்.

    இடுப்பை ஏற்ற என்ன செய்யலாம் என்று சிலரிடம் ஆலோசனை கேட்டபோது, பீர் குடித்தால் பீப்பாய் கணக்காகமாறலாம் என்று ஐடியா சொல்லியுள்ளார்கள்.

    ஆஹா, அருமையான யோசனை (அப்ப, இவ்வளவு நாளா பீர் குடிக்காமலா இந்த பாப்பா பெரிய பீப்பாவாஇருந்துச்சு!) என்று துள்ளிக் குதித்த ரக்ஷி, பீருக்கு மாறும் முடிவுக்கு வந்துள்ளாராம்.

    அதிலயும் ஒரு குழப்பம் வந்து குத்தாட்டம் போடுகிறதாம், அதாவது சாப்பாட்டுக்கு முன்பு குடிக்கலாமா,இல்லை சாப்பிட்ட பிறகு போடலாமா என்பதுதான் அந்த புதுக் குழப்பம்.

    பச்சத் தண்ணிக்கே வழியில்லையாம், பருத்திப் பாலு கேட்டானாம் ஒருத்தன் கதையாவுல்ல இருக்குது!

      Read more about: rakshithas sad story
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X