ரக்ஷிதாவுக்கு டும்..டும்.. சிம்புவுடன் தம், விஜய்யுடன் மதுர ஆகிய படங்களில் நடித்துள்ள, பிரபல கன்னட நடிகை ரக்ஷிதாவுக்கும்,கன்னட இயக்குனர் பிரேமுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.பெங்களூரைச் சேர்ந்த ரக்ஷிதா, தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதில் அரக்க பரக்ககவர்ச்சி காட்டினன். அந்தப் படத்திற்குப் பின் இங்கு சரிப்பட்டு வராதாதல் சொந்த ஊரான கர்நாடகத்துக்கேபோனார்.அங்கு கன்னடப் படங்களில் தொடர்ந்து நடித்தார். அவ்வப்போது தெலுங்கிலும் புகுந்து வெளியே வந்தார். நீண்டஇடைவெளிக்குப் பின் விஜய்யுடன் மதுர படத்தில் நடித்தார். அதில், மதுரை திருமலை நாயக்கர் மகால் தூண்மாதிரி பெருத்திருந்த ரக்ஷிதா கவர்ச்சியைக் அள்ளிக் கொட்டினார்.அதில் பம்பரக் கண்ணு.. பச்ச மிளகாய் என்று ஆட்டமாய் ஆடினார். ஆனால், அந்தப் படமும் தமிழில் காலூன்றஉதவவில்லை. இதையடுத்து மீண்டும் கன்னடம், தெலுங்கு என புகுந்து விளையாடிய ரக்ஷிதா நடித்தகலாசிபாள்யா, மண்டியா போன்ற போன்ற கன்னடப் படங்கள் அதிரடி வெற்றி பெற்றன.இந் நிலையில் ராஜ்குமாரின் மகன் சிவராஜ் நடிக்க ஜோகி என்ற படத்தை இயக்கினார் பிரேம். வசூலில்கன்னடத்தில் புதிய சாதனை படைத்த படம் இது. இதனால் பிரேம் இப்போது முன்னணி இயக்குனராகிவிட்டார்.இந் நிலையில் ரக்ஷிதாவுக்கும் பிரேமுக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் ஒப்புதல்அளித்துவிட்டனர்.இதைத் தொடர்ந்து பெங்களூர் ஜெயநகரில் உள்ள ரக்ஷிதாவின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. இயக்குனர்பிரேமின் பெற்றோரும், ரக்ஷிதாவின் வீட்டாரும் தாம்பூலம் மாற்றி திருமணத்தை நிச்சயித்தனர்.நவம்பர் மாதத்திற்குப் பிறகு திருமணம் நடைபெறுமாம். அதற்குள் தனது படங்களை முடித்துவிட்டு சினிமாவுக்குகும்பிடு போட ரக்ஷிதா முடிவு செய்துள்ளார்.இதற்கிடையே பிரேம் இயக்கிய ஜோகி படம் தமிழுக்கு வருகிறது. இந்தப் படத்தை ஆர்.வி. உதயக்குமார்தமிழில் தயாரிக்க உரிமை வாங்கியுள்ளார். தனுஷ் நடிக்க ஜோகி, தமிழில் உருவாகவுள்ளது.படத்தை இயக்கப் போவது யார் தெரியுமோ?.. டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரமாம்.அவரது தம்பி பிரபு தேவாவும் தெலுங்கில் இயக்குராகிவிட்டார். இப்போது ராஜுவும் டைரடக்கரு ஆகிறார்.மீண்டும் ரக்ஷிதாவுக்கு வருவோம். ஸ்வேதா என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சூர்யாவின் மிகப் பெரியபேன். என்னமா இருக்காரு ஆளு.. என்னமா நடிக்கிறாரு என்று புகழ்ந்து வரும் ரக்ஷிதாவை மாதவனுடனும்தனுஷ் உடனும் இரு தமிழ்ப் படங்களில் நடிக்க பேச்சு நடந்தது.ஆனால், இப்போது திருமணம் ஆகப் போவதால் அந்த ப்ராஜெக்ட்களில் இருந்து ரக்ஷ் விலகிக்கொண்டுவிடுவார் என்கிறார்கள்.
சிம்புவுடன் தம், விஜய்யுடன் மதுர ஆகிய படங்களில் நடித்துள்ள, பிரபல கன்னட நடிகை ரக்ஷிதாவுக்கும்,கன்னட இயக்குனர் பிரேமுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ரக்ஷிதா, தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதில் அரக்க பரக்ககவர்ச்சி காட்டினன். அந்தப் படத்திற்குப் பின் இங்கு சரிப்பட்டு வராதாதல் சொந்த ஊரான கர்நாடகத்துக்கேபோனார்.
அங்கு கன்னடப் படங்களில் தொடர்ந்து நடித்தார். அவ்வப்போது தெலுங்கிலும் புகுந்து வெளியே வந்தார். நீண்டஇடைவெளிக்குப் பின் விஜய்யுடன் மதுர படத்தில் நடித்தார். அதில், மதுரை திருமலை நாயக்கர் மகால் தூண்மாதிரி பெருத்திருந்த ரக்ஷிதா கவர்ச்சியைக் அள்ளிக் கொட்டினார்.
அதில் பம்பரக் கண்ணு.. பச்ச மிளகாய் என்று ஆட்டமாய் ஆடினார். ஆனால், அந்தப் படமும் தமிழில் காலூன்றஉதவவில்லை. இதையடுத்து மீண்டும் கன்னடம், தெலுங்கு என புகுந்து விளையாடிய ரக்ஷிதா நடித்தகலாசிபாள்யா, மண்டியா போன்ற போன்ற கன்னடப் படங்கள் அதிரடி வெற்றி பெற்றன.
இந் நிலையில் ராஜ்குமாரின் மகன் சிவராஜ் நடிக்க ஜோகி என்ற படத்தை இயக்கினார் பிரேம். வசூலில்கன்னடத்தில் புதிய சாதனை படைத்த படம் இது. இதனால் பிரேம் இப்போது முன்னணி இயக்குனராகிவிட்டார்.
இந் நிலையில் ரக்ஷிதாவுக்கும் பிரேமுக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் ஒப்புதல்அளித்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து பெங்களூர் ஜெயநகரில் உள்ள ரக்ஷிதாவின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. இயக்குனர்பிரேமின் பெற்றோரும், ரக்ஷிதாவின் வீட்டாரும் தாம்பூலம் மாற்றி திருமணத்தை நிச்சயித்தனர்.
நவம்பர் மாதத்திற்குப் பிறகு திருமணம் நடைபெறுமாம். அதற்குள் தனது படங்களை முடித்துவிட்டு சினிமாவுக்குகும்பிடு போட ரக்ஷிதா முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையே பிரேம் இயக்கிய ஜோகி படம் தமிழுக்கு வருகிறது. இந்தப் படத்தை ஆர்.வி. உதயக்குமார்தமிழில் தயாரிக்க உரிமை வாங்கியுள்ளார். தனுஷ் நடிக்க ஜோகி, தமிழில் உருவாகவுள்ளது.
படத்தை இயக்கப் போவது யார் தெரியுமோ?.. டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரமாம்.
அவரது தம்பி பிரபு தேவாவும் தெலுங்கில் இயக்குராகிவிட்டார். இப்போது ராஜுவும் டைரடக்கரு ஆகிறார்.
மீண்டும் ரக்ஷிதாவுக்கு வருவோம். ஸ்வேதா என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சூர்யாவின் மிகப் பெரியபேன். என்னமா இருக்காரு ஆளு.. என்னமா நடிக்கிறாரு என்று புகழ்ந்து வரும் ரக்ஷிதாவை மாதவனுடனும்தனுஷ் உடனும் இரு தமிழ்ப் படங்களில் நடிக்க பேச்சு நடந்தது.
ஆனால், இப்போது திருமணம் ஆகப் போவதால் அந்த ப்ராஜெக்ட்களில் இருந்து ரக்ஷ் விலகிக்கொண்டுவிடுவார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications