twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராணாவுடன் காதலா?.. உண்மையை உடைத்து சொன்ன காத்திர பட ஹீரோயின்!

    நடிகர் ராணா டகுபதி தன்னுடைய நெருங்கிய நண்பர் மட்டும் தான் என நடிகை ரகுல் பிரீத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

    |

    சென்னை: நடிகர் ராணா டகுபதியுடனான உறவு குறித்து நடிகை ரகுல் பிரீத் சிங் முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.

    தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியான நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத் சிங். இந்தியில் இவர் நடித்துள்ள மர்ஜாவான் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகிறது.

    Rakul Preet Singh explains about her relationship with Rana Dagubati

    தமிழில் இந்தியன் 2 படத்தில் ரகுல் நடித்து வருகிறார். இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார்.

    இந்நிலையில் பாகுபலி வில்லன் நடிகர் ராணா டகுபதியும், ரகுல் பிரீத் சிங்கும் காதலிப்பதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

    இதுகுறித்து ரகுல் முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். அதில், "ராணா எனது பக்கத்து வீட்டுக்காரர். லட்சுமி மஞ்சு மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்களானோம். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் ரானாவும் ஒருவர். நான் சினிமாவில் நடிக்க தொடங்கியதில் இருந்து எனக்கு ரானாவை தெரியும். மற்றப்படி எங்கள் இருவருக்குள்ளும் வேறு எதுவும் இல்லை", என தெரிவித்துள்ளார்.

    மேலும் "நான் பிஸியாக நடித்து வருகிறேன். எனவே இப்போது காதலிக்கும் யோசனை எதுவும் எனக்கு இல்லை. அதனால் நான் தற்போது சிங்கிள் தான்", என ரகுல் கூறியுள்ளார்.

    English summary
    Actress Rakul Preet Singh puts fullstop to the rumors by sayin that there is nothing between her and Rana.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X