Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'பெரிய நடிகர்களுடன்...' - ரம்யா நம்பீஸன் ஆசை!
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், குள்ளநரி கூட்டம். இந்த படத்தில், அவருக்கு ஜோடி ரம்யா நம்பீசன். ஆசிஷ் ஜெயின் தயாரித்துள்ள இந்த படத்தை, ஸ்ரீபாலாஜி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் இசை குறுந்தகட்டை இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்டு வாழ்த்தினார்.
படப்பிடிப்பு முடிந்து, ரிலீஸுக்குத் தயாராக உள்ள இந்தப் படத்தின் அறிமுக கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "குள்ளநரி கூட்டம் படத்தை நான் முழுமையாக பார்த்து விட்டேன். இந்த படத்தில் நட்பு இருக்கிறது. காதல் இருக்கிறது. அப்பா-மகன், அம்மா-மகன் இடையேயான பாசம் இருக்கிறது.
சின்ன பட்ஜெட்டில் தயாராகும் இந்த மாதிரியான நல்ல படங்கள் வருவது, அபூர்வமாகவே இருக்கிறது. இதுபோல் நிறைய படங்கள் வரவேண்டும். என்னால் முடிந்த அளவு இந்தப் படத்தை ப்ரமோட் செய்வேன்,'' என்றார்.
படத்தின் கதாநாயகி ரம்யா நம்பீசன் கூறுகையில், "தமிழில் நான் நடித்து வெளிவந்த முதல் படம், 'ராமன் தேடிய சீதை.' அதையடுத்து, ஆட்ட நாயகன்,' 'இளைஞன்' ஆகிய படங்கள் வந்தன. இதுவரை நான் ஜோடியாக நடித்த கதாநாயகர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார்களும் அல்ல. பெரிய கதாநாயகர்களும் அல்ல.
பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. எல்லா கதாநாயகர்களுடனும் ஜோடியாக நான் நடிக்க வேண்டும்.
மலையாள படங்களில், நான் சொந்த குரலில் பாடிவிட்டேன். அதேபோல் தமிழ் படங்களிலும் சொந்த குரலில் பாட ஆசைப்படுகிறேன். நல்ல வாய்ப்பு வந்தால், சொந்த குரலில் பாடுவேன்,'' என்றார்.
நடிகர் விஷ்ணு, தயாரிப்பாளர் ஆசிஷ் ஜெயின், இயக்குநர் பாலாஜி, பாடல் ஆசிரியர் கவிஞர் இளங்கோ, இசையமைப்பாளர் செல்வகணேஷ், படத்தொகுப்பாளர் மு.காசிவிஸ்வநாதன் ஆகியோரும் பேசினார்கள்.
நிகழ்ச்சியை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தொகுத்து வழங்கினார்.
-
இளையராஜா பயோபிக்.. வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கேரக்டர்களில் நடிப்பவர்கள் இவர்களா?.. ஃபேன்ஸ் ஆச்சரியம்
-
Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!