Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ராணி முகர்ஜி- ஆதித்ய சோப்ரா திருமணம்: பிப்ரவரி 10-ம் தேதி ஜோத்பூரில் நடக்கிறது!
மும்பை: பாலிவுட்டின் பிரபல நாயகி ராணி முகர்ஜியும் தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ராவும் வரும் பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் செய்து கொள்கின்றனர்.
ஜோத்பூரில் உள்ள பிரமாண்ட உமைத் பவன் மாளிகையில் இந்த திருமணம் நடக்கிறது.
இந்தி நடிகை ராணி முகர்ஜியும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணமாகாமலேயே சேர்ந்து வாழ்வதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்பட்டது. தற்போது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் 10-ந் தேதி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். முகூர்த்தம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் மாளிகையில் நடக்கிறது. இரண்டு வாரங்கள் திருமண சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த திருமணத்துக்கு உறவினர்கள் மற்றும் குறிப்பிட்ட சில நடிகர் - நடிகைகளை மட்டுமே அழைக்கப் போகிறார்களாம்.