twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இத்தாலியில் காதலரை ரகசியமாக மணந்த நடிகை ராணி முகர்ஜி

    By Siva
    |

    ரோம்: பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தனது காதலர் ஆதித்யா சோப்ராவை ரகசிசயமாக திருமணம் செய்து கொண்டார்.

    பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியும், மறைந்த பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான யஷ் சோப்ராவின் மூத்த மகன் ஆதித்யா சோப்ராவை காதலித்து வந்தார். ஆதித்யா ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர்.

    ஆதித்யாவும், ராணியும் காதலித்தது பாலிவுட் அறிந்த கதை.

    காதல்

    காதல்

    ஆதித்யாவும், ராணியும் தங்கள் காதலை பல ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தனர். அவர்களை பொறுத்த வரை தான் அது ரகசியம். ஆனால் பாலிவுட்டில் அனைவருக்கும் அவர்கள் விவகாரம் பற்றி தெரியும்.

    சத்ருகன் சின்ஹா

    சத்ருகன் சின்ஹா

    யஷ் சோப்ரா மறைவுக்கு பிறந்த நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சத்ருகன் சின்ஹா மேடையில் பேசுகையில் ராணியை ராணி சோப்ரா என்று அழைத்தார். அது ராணிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

    கல்யாணம்

    கல்யாணம்

    ராணியும், ஆதித்யாவும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாகவும் ராணியின் மார்க்கெட் பாதிக்காமல் இருக்க அதை வெளியே தெரிவிக்காமல் இருப்பதாகவும் பாலிவுட்டில் பேச்சு அடிபட்டது.

    எப்பொழுது?

    எப்பொழுது?

    ஆதித்யா, ராணி முகர்ஜி எப்பொழுது தான் திருமணம் செய்து கொள்வார்களோ என்று பாலிவுட்டில் பலரும் கேட்கத் துவங்கிவிட்டனர்.

    ஒருவழியாக

    ஒருவழியாக

    இத்தனை நாட்களாக இழுத்தடித்த ஆதித்யாவும், ராணியும் ஒருவழியாக நேற்று இரவு இத்தாலியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

    English summary
    Bollywood actress Rani Mukherji and filmaker Aditya Chopra have finally got married in Italy last night.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X