Don't Miss!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இத்தாலியில் காதலரை ரகசியமாக மணந்த நடிகை ராணி முகர்ஜி
ரோம்: பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தனது காதலர் ஆதித்யா சோப்ராவை ரகசிசயமாக திருமணம் செய்து கொண்டார்.
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியும், மறைந்த பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான யஷ் சோப்ராவின் மூத்த மகன் ஆதித்யா சோப்ராவை காதலித்து வந்தார். ஆதித்யா ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர்.
ஆதித்யாவும், ராணியும் காதலித்தது பாலிவுட் அறிந்த கதை.
காதல்
ஆதித்யாவும், ராணியும் தங்கள் காதலை பல ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தனர். அவர்களை பொறுத்த வரை தான் அது ரகசியம். ஆனால் பாலிவுட்டில் அனைவருக்கும் அவர்கள் விவகாரம் பற்றி தெரியும்.
சத்ருகன் சின்ஹா
யஷ் சோப்ரா மறைவுக்கு பிறந்த நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சத்ருகன் சின்ஹா மேடையில் பேசுகையில் ராணியை ராணி சோப்ரா என்று அழைத்தார். அது ராணிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
கல்யாணம்
ராணியும், ஆதித்யாவும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாகவும் ராணியின் மார்க்கெட் பாதிக்காமல் இருக்க அதை வெளியே தெரிவிக்காமல் இருப்பதாகவும் பாலிவுட்டில் பேச்சு அடிபட்டது.
எப்பொழுது?
ஆதித்யா, ராணி முகர்ஜி எப்பொழுது தான் திருமணம் செய்து கொள்வார்களோ என்று பாலிவுட்டில் பலரும் கேட்கத் துவங்கிவிட்டனர்.
ஒருவழியாக
இத்தனை நாட்களாக இழுத்தடித்த ஆதித்யாவும், ராணியும் ஒருவழியாக நேற்று இரவு இத்தாலியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர்.