ரன்வீருடனான காதலுக்கு சொந்த செலவில் சூனியம் வைத்தாரா நடிகை தீபிகா?
மும்பை: காதலர்களான பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தீபிகா இதை மறுத்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் ராம் லீலா படத்தில் நடிக்கும்போது காதலில் விழுந்தார்கள். ரன்வீர் சிங் நேரம் கிடைக்கும் போது எல்லாம் தீபிகா பற்றியும், காதல் பற்றியும் பேசுவார்.
தீபிகா ரன்வீருடனான காதல் பற்றி பேசுவதை தவிர்த்து வருகிறார்.

பிரிவு
ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் பிரிந்துவிட்டார்கள் என்று பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. ரன்வீர் உருகி உருகி காதலித்தாலும் தீபிகா அதை கண்டுகொள்ளாததால் இந்த பிரிவு என்று கூறப்படுகிறது.

தீபிகா
சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் பத்மாவதி படத்தில் தீபிகா, ரன்வீர் சிங் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தனக்கு கணவராக பாகிஸ்தான் நடிகர் பவாத் கானை ஒப்பந்தம் செய்யுமாறு தீபிகா கூறினாராம். பவாதுடன் தீபிகா நெருக்கம் காட்டுவது ரன்வீருக்கு பிடிக்கவில்லையாம்.

ஷாஹித் கபூர்
பத்மாவதி படத்தில் தீபிகாவுக்கு கணவராக ஷாஹித் கபூர் நடிக்கிறார். தீபிகா ஷாஹித்துடன் ஓவர் நெருக்கம் காட்டுவதும் ரன்வீருக்கு பிடிக்கவில்லையாம்.

வதந்தி
ரன்வீர் சிங்கை பிரிந்துவிட்டீர்களா என்று தீபிகாவிடம் கேட்டதற்கு, இது போன்று ஏதாவது பேசத் தான் செய்வார்கள். அதற்கு எல்லாம் முக்கியத்துவம் அளிக்க முடியாது என்றார்.


Click it and Unblock the Notifications











