Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சமந்தாவுடன் போட்டி போடும் ராஷ்மிகா.. ஒரே ஒரு பாடலுக்கு ஆட எவ்வளவு சம்பளம் கேட்டார் தெரியுமா ?
சென்னை : நடிகை ராஷ்மிகாவும் சமந்தாவுடன் போட்டி போட்டுக்கொண்டு தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.
தெலுங்கு முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.
கார்த்தியின் 'சுல்தான்' படம் மூலம் தமிழுக்கு வந்தார். அந்தப் படம் அவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்துள்ளது.
ஓடிடிக்கு போயும் ஒர்க்கவுட் ஆகலையே.. கதறி அழும் இளம் நடிகை.. எல்லாருமே சமத்து பேபி ஆகிட முடியுமா?
புஷ்பா
அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கில் உச்சகட்ட கவர்ச்சியில் சமந்தா ஆடிய நடனம் திரையுலகினரை மட்டுமல்லாது ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சமந்தா ஆடிய ஐட்டம் பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
5 கோடி சம்பளம்
இந்தபடத்தில் வரும் 3 நிமிட பாடலுக்காகவே, இப்படத்தை முட்டிமோதி பார்த்தக்கூட்டமும் உண்டு. இந்த ஐட்டம் பாடலுக்கு நடனமாட முதலில் சமந்தா மறுத்ததாகவும், அதன் பின்னர் நடிகர் அல்லு அர்ஜுன் அவரை சமாதானப்படுத்தியதோடு, சம்பளத்தையும் அதிகமாக தருவதாக கூறி ஆட வைத்தாராம். அதன்படி இப்பாடலில் கவர்ச்சி நடனம் ஆட நடிகை சமந்தா ரூ.5 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
சம்பளத்தை உயர்த்தினார்
அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகாவுக்கே அவ்வளவு சம்பளம் இல்லை என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதனால்,ராஷ்மிகா நிச்சயமா கடுப்பில் இருந்து இருப்பார் போல, இதனால், ஒரு பாடலுக்கு ஆட, ராஷ்மிகாவை அணுகிய போது, வந்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்திக் கொண்டு ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.
இவ்வளவு சம்பளமா
ஒரே ஒரு பாடலுக்கு ஆட ராஷ்மிகா, சம்பளமாக ரூ.2 கோடி கேட்டுள்ளார். இது தயாரிப்பாளரை அதிர்ச்சி அடைய வைத்தாலும் அவர் கேட்டதை கொடுத்துவிட்டு ஆட வைக்க இருக்கிறார்களாம். அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி இப்போது அனிமல்' என்ற படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். அந்த படத்தில் ஆடத்தான் ராஷ்மிகா கோடியில் சம்பளத்தை கேட்டுள்ளார்.