அவ்ளோதான் உனக்கு.. நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த ராஷ்மிகா
சென்னை: கீதகோவிந்தம் படத்தில் இடம்பெற்ற 'இன்கேம் இன்கேம்' பாடலின் மூலம் ஓவர் நைட்டில் தென்னிந்திய ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழில் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் தன்னுடைய குழந்தை பருவ புகைப்படத்தை பதிவிட்டு ட்ரோல் செய்த நபருக்கு ராஷ்மிகா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

சுல்தான்
ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க உள்ளார். சுல்தான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன ட்ரோல்
கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் ராஷ்மிகா மந்தனாவுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம் சமீபத்தில் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது. இதனால், சோஷியல் மீடியாவில் ராஷ்மிகா குறித்து பல்வேறு ட்ரோல்கள் மற்றும் மீம்கள் வெளிவந்தன. அதில், ஒரு நெட்டிசன், ராஷ்மிகாவின் சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டு, தகாத வார்த்தைகளால் ட்ரோல் செய்திருந்தார்.

கடுப்பான ராஷ்மிகா
இதனால் நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் கடுப்பாகி உள்ளார். நடிகர்கள் என்றால், உங்களுக்கு ஈஸியான டார்கெட்டாக இருக்கிறதா இதுபோன்று தகாத வார்த்தைகளால் விமர்சிக்க எப்படி உங்களுக்கு தைரியம் வருகிறது. நாங்களும் மனிதர்கள் தான். எனது படங்களை குறித்து விமர்சிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்க உங்களுக்கு உரிமை இல்லை என பதிலடி கொடுத்துள்ளார்.
சப்போர்ட்
ராஷ்மிகாவின் இந்த பதிலடியை தொடர்ந்து, அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற நபர்களை சும்மா விடக்கூடாது என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











