Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு சாதகம்
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'நல்ல கதை இருந்தா மெயில் பண்ணிட்டு வெயிட் பண்ணுங்க..' படம் தயாரிக்கப் போகிறார் ஐடி ரெய்டு ஹீரோயின்!
சென்னை: சமீபத்தில் ஐடி ரெய்டை எதிர்கொண்ட ஹீரோயின், படம் தயாரிக்கக் கதை கேட்டிருக்கிறார்.
கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் சலோ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
அவருக்கு வரவேற்பு கிடைத்தது. பின்னர், விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இது சூப்பர் ஹிட்டானது.
கார்த்தியின் சுல்தான்
பிசியாகி விட்ட ராஷ்மி, விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் மூலம் தமிழுக்கும் வந்தார். மகேஷ்பாபுவுடன் இவர் நடித்துள்ள சரிலேரு நீக்கெவரு என்ற தெலுங்கு படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ஹிட்டானது. அடுத்து அவர் நிதினுடன் நடித்த பீஷ்மா என்ற படம் பிப்ரவரில் ஹிட்டாக, நடிகையை பிடிக்க முடியவில்லை. அடுத்து அல்லு அர்ஜூன் ஜோடியாக சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
சூர்யா ஜோடி
இவர், தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இதை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அருவா படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாக இருக்கிறது. மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நல்ல ஸ்கிரிப்ட்
இந்நிலையில் இவர் சமீபத்தில் ட்விட்டரில் மில்லியர் பாலோயர்கள் பேமிலியில் இணைந்தார். இதற்காக ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து இருந்தார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா, படம் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக நல்ல ஸ்கிரிப்ட்களை தேடிவருகிறார். இதுபற்றி தனது ட்விட்டரில் அவர் கூறியுள்ளார்.
பொறுமையாக இருங்கள்
ஆர்வமுள்ள இயக்குனர்கள் மற்றும் எழுத்தாளர்கள் நல்ல கதை அல்லது ஐடியா இருந்தால், அதை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். எனது டீமும் நானும் சரிபார்த்து எது பிடித்திருக்கிறதோ, அது தொடர்பாக உங்களுக்குத் தெரிவிப்போம். நாங்கள் சிறிய குழு. எங்களுடன் பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
வழக்கமாக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள்தான் இப்படி கதைகள் இருந்தால் கேட்பார்கள். இப்போது நடிகை ராஷ்மிகா கேட்டுள்ளதால், அவர் படம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.