அய்யோ ஆளை விடுங்க.. கையெடுத்து கும்பிட்ட ராஷ்மிகா மந்தனா?.. அப்படி என்ன ஆச்சு?
பெங்களூர்: ராஷ்மிகா மந்தனா இப்போது பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக அனிமல் திரைப்படம் வெளியானது. படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் ராஷ்மிகாவுக்கு ஹிந்தியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். மேலும் தமிழிலும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
கன்னட சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலுங்கு சினிமா பலத்த வரவேற்பை கொடுத்தது. விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தில் அவரது நடிப்பும், அழகும் ரசிகர்களையும், திரைத்துறையினரையும் கவர அடுத்தடுத்து ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் அசுர வேகத்தில் வளர்ந்தார்.

புஷ்பா: தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனாவுக்கு புஷ்பா திரைப்படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி மெகா ஹிட்டானதால் ராஷ்மிகா மந்தனாவுக்கு மேலும் புகழ் வெளிச்சம் கிடைத்தது. அதேபோல் அந்தப் படத்தில் அவர் ஆடிய நடனமும் பெரும் வரவேற்பை பெற்றது.
நேஷனல் கிரஷ்: புஷ்பா படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ராஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ் என்ற பெயரை பெற்றார். அவரது எக்ஸ்பிரஷென்கள் பயங்கர க்யூட்டாக இருக்கிறது என்று ரசிகர்கள் சிலாகிக்க ஆரம்பித்தனர். சூழல் இப்படி இருக்க தமிழில் சுல்தான் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. விஜய்யுடன் நடித்த வாரிசு படமும் தோல்வியை சந்தித்ததால் கோலிவுட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருக்கிறார்.
அனிமல்: தமிழில் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டாலும் ஹிந்தியில் வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் அவர் கடைசியாக ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் நடித்திருந்தார்.. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அந்தப் படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. அதிலும் ராஷ்மிகாவின் நடிப்பும், கிளாமரும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது என்றே சொல்லலாம். அதன் காரணமாக அவர் சம்பளத்தை உயர்த்திவிட்டதாகவும் ஒரு தகவல் சிறகடிக்கிறது.
அடுத்தடுத்த படங்கள்: அனிமல் படம் அவருக்கு கொடுத்த ரெஸ்பான்ஸை அடுத்து ஹிந்தியில் இன்னொரு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். சல்மான் கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ராஷ்மிகா. அதுமட்டுமின்றி தமிழிலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வேறு சில படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிகிறது. இதற்கிடையே புஷ்பா 2 படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.
கையெடுத்து கும்பிட்ட ராஷ்மிகா: இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது விமான நிலையம் வந்த அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படங்கள் எடுக்கவும், கேள்விகள் கேட்கவும் முயன்றனர். ஆனால் ராஷ்மிகாவோ அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டபடி கடந்து சென்றார். எப்போதும் பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுக்கும் ராஷ்மிகா இப்போது ஏன் இப்படி செய்தார்; ஒருவேளை கேள்விக்கு பதிலளிக்க ஆரம்பித்தால் தன்னையும், விஜய் தேவரகொண்டாவையும் சேர்த்து எழுப்பப்படும் கிசுகிசு குறித்து கேள்வி கேட்பார்களோ என்று அஞ்சிதான் இப்படி நடந்துகொண்டாரோ என்னவோ என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











