Don't Miss!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- News 370 இடங்கள்.. அடித்து சொன்ன மோடி.. டார்கெட் வச்ச பாஜக.. ஆனால் இந்த கணக்கு இடிக்குதே? கவனிச்சீங்களா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கையில் கம்புடன் விடாமல் விரட்டிய பெண்.. மரமேறி மாங்காய் பறித்து வசமாக மாட்டிய பிரபல ஹீரோயின்!
சென்னை: தான் சின்ன வயதில் மாங்காய் பறித்து மாட்டிய கதையை, சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் பிரபல நடிகை.
கொரோனா வைரஸ் பாதிப்பால், லாக்டவுனை மத்திய மாநில அரசுகள் நீட்டித்துள்ளன.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பலியாகிறவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
குட்டி ஸ்கர்ட்ல வொர்க் அவுட்.. அதுவும் என்ன மாதிரி பொஸிஷன்னு பாருங்க.. வைரலாகும் நடிகையின் போட்டோ!
கொரோனா வைரஸ்
இந்தியாவில், இதுவரை இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3029 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்த தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
ராஷ்மிகா மந்தனா
படப்பிடிப்புகள் இல்லை என்பதால் நடிகர், நடிகைகளும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். சில நடிகர், நடிகைகள், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்து தங்கள் நேரத்தை கழித்து வருகின்றனர். அதன்படி தெலுங்கு சினிமாவின் லக்கி ஹீரோயின் என சொல்லப்படும் ராஷ்மிகா மந்தனா, ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
மாங்காய்கள்
அவரிடம் பலர் கேள்விகேட்டனர். ஒருவர் உங்களது சின்னவயதில் நடந்த ஜாலியான அனுபவங்களை கூறுங்களேன் என்று கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த ராஷ்மிகா கூறியதாவது: ஒரு முறை நானும் எனது தோழிகளும் டியூஷன் சென்று கொண்டிருந்தோம். வழியில் ஒரு மாமரம். மாங்காய்கள், கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்தன. பார்த்ததும் பறித்து சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.
இறங்கி ஓடினேன்
வேகமாக மரத்தில் ஏறிவிட்டேன். பறித்துவிட்டு கீழே இறங்குவதற்குள் சத்தம் கேட்டு வீட்டுக்காரப் பெண், கையில் கம்புடன் வெளியே வந்துவிட்டார். நான் சிக்கிக் கொண்டேன். இருந்தாலும் வேகமாக கீழே குதித்து ஓடினேன். அவரும் விடவில்லை. தொடர்ந்து, திட்டியபடி எங்களை விரட்டிக் கொண்டே வந்தார். இது அந்த காலத்தில் எங்களுக்கு ஜாலியாக இருந்தது' என்று தெரிவித்துள்ளார்.
முதல் சினிமா
நீங்கள் பார்த்த முதல் சினிமா எது என்று ஒருவர் கேட்டதற்கு 'கில்லி' என்று கூறியுள்ளார் ராஷ்மிகா. 'அந்தப் படம் என்றுதான் நினைக்கிறேன். என் அப்பா அழைத்து சென்றார்' என்று கூறியுள்ளார். நடிகை ராஷ்மிகா, தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
Recommended Video
அல்லு அர்ஜுன்
கன்னட நடிகையான ராஷ்மிகா, தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இது மெகா ஹிட். அடுத்து, டியர் காம்ரேட் படத்தில் நடித்தார். இந்தப் படம் மூலம் தமிழுக்கும் வந்தார். மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த சரிலேரு நீக்கெவரு, நிதினுடன் நடித்த பீஷ்மா படங்கள் ஹிட்டாக, தெலுங்கில் லக்கி ஹீரோயின் ஆனார். இப்போது அல்லு அர்ஜூன் ஜோடியாக, புஷ்பா படத்தில் நடிக்க இருக்கிறார்.