Don't Miss!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
இனி யாராவது கார்த்தி ஹீரோயினை பார்த்து சம்பளம் பத்தி கேட்பாங்க!!
பெங்களூர்: சம்பள உயர்வு குறித்து நடிகை ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களை கவர்ந்துள்ளது.
கன்னட நடிகையான ரஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் படம் மூலம் பிரபலமானார். அவர் விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள டியர் காம்ரேட் படம் வரும் 26ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் டியர் காம்ரேட் பட விளம்பர நிகழ்ச்சிகளில் விஜய்யும், ரஷ்மிகாவும் கலந்து கொண்டு வருகின்றனர்.
வனிதா மீது தப்பில்ல, அந்த 'நாட்டாமை'யை தான் சொல்லணும்: சிவகுமார்
ரஷ்மிகா
ரஷ்மிகா தெலுங்கு திரையுலகின் வேகமாக வளரும் நடிகையாக உள்ளார். மேலும் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார் ரஷ்மிகா. அவர் தனது வளர்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அது சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை.
பணம்
வளரவே இல்லை அதற்குள் சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்துவதா என்று ரஷ்மிகாவை திரையுலகினர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் ரஷ்மிகா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவரிடம் சம்பள உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் தெளிவான பதில் அளித்துள்ளார்.
முன்னேற்றம்
நான் நடிக்க வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் வளர்ச்சி அடையும்போது சம்பளத்தை உயர்த்துவது நியாயம் தானே. நீங்கள் ப்ரொமோஷன் மற்றும் ஊதிய உயர்வு கேட்க மாட்டீர்களா?. நானும் அப்படித் தான் என்று செய்தியாளரை பார்த்து தெரிவித்தார் ரஷ்மிகா மந்தனா. அதன் பிறகு யாரும் அவரிடம் சம்பளம் பற்றி எதுவும் கேட்கவில்லை.
லட்சங்கள்
ஒரு படத்தில் நடிக்க ரூ. 40 லட்சம் வாங்கி வந்தார் ரஷ்மிகா. அவரின் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதையடுத்து ரூ. 60 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை கேட்கிறார். அவர் தற்போது நடித்து வரும் கன்னட படத்திற்கு ரூ. 64 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளாராம். இதன் மூலம் கன்னட திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் சேர்ந்துள்ளார் ரஷ்மிகா மந்தனா. இந்நிலையில் தான் அவர் கேட்கும் சம்பளம் டூ டூ மச்சாக உள்ளது என்று குமுறுகிறார்கள் கன்னட திரையுலகினர்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!