Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சாமக்கோழி ரதி சொல்ல மறந்த கதையில் அறிமுகமான ரதிக்கு ஒரு வழியாக இப்போது மீண்டும் கோலிவுட் கதவு திறந்துள்ளது.சொல்ல மறந்த கதைக்குப் பின், எங்கே எனது கவிதை படத்தில் குணாலுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். படம் பெரும் பிளாப்.இதைத் தொடர்ந்து அவர் நடித்த கும்மாளம், பல்லவன் ஆகிய படங்களும் வரிசையாக படுதோல்வி அடையவே ராசியில்லாத நடிகைஎன்று பட்டம் கட்டப்பட்டார். நீண்ட காத்திருப்புக்குப் பின் கடைசியாக அடிதடி என்ற படத்தில் நடித்தார். 6 பிளஸ் அடி, 85 பிளஸ் கிலோ எடையுள்ள சத்யராஜுக்கு ஜோடியாக அவரது உயரம், எடையில் 2ல் ஒரு பங்கு இருந்த ரதி ஜோடிபோட்டபோது அதைப் பார்த்து தியேட்டரே சிரித்தது. வயசு வித்தியாசம் பார்க்காமல் வரும் காதல் பற்றிய கதை என்றாலும் சைஸ்வித்தியாசம் தான் படு கிண்டலுக்குள்ளானது.அந்தப் படத்துக்குப் பின் ரதிக்கு தமிழில் ஒரு படமும் கிடைக்கவில்லை. இதையடுத்து தமிழில் பிற நடிகைகளுக்கு டப்பிங் கொடுக்கும்தொழிலுக்கு மாறிவிட்டார். பெங்களூரைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ்ப் பெண்ணான ரதிக்கு மிக நல்ல வாய்ஸ். இதனால் அந்தத் தொழில்கை கொடுத்தது.அப்படியே தெலுங்கு, கன்னடத்தில் 2ம் தர படங்களில் நடித்தபடியே தமிழில் வாய்ப்பு வேடடையும் நடத்தி வந்தார். அப்படியாக ஒருவாய்ப்பு கிடைத்துவிட்டது. ஆனால், படத்தில் படு கிளாமர் காட்டும் ரோலாம். முதலில் அதைத் தவிர்க்கப் பார்த்த ரதி, காலம் தன்னைவிட்டுப் போவதை உணர்ந்து, அந்த கவர்ச்சி ரோலை துணிந்து ஏற்றுக் கொண்டுவிட்டார். படத்தின் பெயர் சாமக்கோழி. நளினி, லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடிக்கும் இதன் சூட்டிங் மதுரை, பெங்களூர், கும்பகோணம்,மகாபலிபுரம் பகுதிகளில் நடந்து வருகிறது. அடுத்த மாத்தே படம் திரைக்கு வந்துவிடுமாம்.மீனாட்சி சுந்தரம் என்பவர் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார்.ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை உணர்ந்து ரதியும் படு கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம். மீனவ சமூகத்தை பேக்கிரவுண்டாகவைத்து எடுக்கப்படும் கதையாம். ஹீரோ புதுமுகம். இசை தேவா.
சொல்ல மறந்த கதையில் அறிமுகமான ரதிக்கு ஒரு வழியாக இப்போது மீண்டும் கோலிவுட் கதவு திறந்துள்ளது.
சொல்ல மறந்த கதைக்குப் பின், எங்கே எனது கவிதை படத்தில் குணாலுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். படம் பெரும் பிளாப்.
இதைத் தொடர்ந்து அவர் நடித்த கும்மாளம், பல்லவன் ஆகிய படங்களும் வரிசையாக படுதோல்வி அடையவே ராசியில்லாத நடிகைஎன்று பட்டம் கட்டப்பட்டார். நீண்ட காத்திருப்புக்குப் பின் கடைசியாக அடிதடி என்ற படத்தில் நடித்தார்.
6 பிளஸ் அடி, 85 பிளஸ் கிலோ எடையுள்ள சத்யராஜுக்கு ஜோடியாக அவரது உயரம், எடையில் 2ல் ஒரு பங்கு இருந்த ரதி ஜோடிபோட்டபோது அதைப் பார்த்து தியேட்டரே சிரித்தது. வயசு வித்தியாசம் பார்க்காமல் வரும் காதல் பற்றிய கதை என்றாலும் சைஸ்வித்தியாசம் தான் படு கிண்டலுக்குள்ளானது.
அந்தப் படத்துக்குப் பின் ரதிக்கு தமிழில் ஒரு படமும் கிடைக்கவில்லை. இதையடுத்து தமிழில் பிற நடிகைகளுக்கு டப்பிங் கொடுக்கும்தொழிலுக்கு மாறிவிட்டார். பெங்களூரைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ்ப் பெண்ணான ரதிக்கு மிக நல்ல வாய்ஸ். இதனால் அந்தத் தொழில்கை கொடுத்தது.
அப்படியே தெலுங்கு, கன்னடத்தில் 2ம் தர படங்களில் நடித்தபடியே தமிழில் வாய்ப்பு வேடடையும் நடத்தி வந்தார். அப்படியாக ஒருவாய்ப்பு கிடைத்துவிட்டது. ஆனால், படத்தில் படு கிளாமர் காட்டும் ரோலாம். முதலில் அதைத் தவிர்க்கப் பார்த்த ரதி, காலம் தன்னைவிட்டுப் போவதை உணர்ந்து, அந்த கவர்ச்சி ரோலை துணிந்து ஏற்றுக் கொண்டுவிட்டார்.
படத்தின் பெயர் சாமக்கோழி. நளினி, லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடிக்கும் இதன் சூட்டிங் மதுரை, பெங்களூர், கும்பகோணம்,மகாபலிபுரம் பகுதிகளில் நடந்து வருகிறது. அடுத்த மாத்தே படம் திரைக்கு வந்துவிடுமாம்.
மீனாட்சி சுந்தரம் என்பவர் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார்.
ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை உணர்ந்து ரதியும் படு கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம். மீனவ சமூகத்தை பேக்கிரவுண்டாகவைத்து எடுக்கப்படும் கதையாம். ஹீரோ புதுமுகம். இசை தேவா.