Don't Miss!
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கண்ட இடத்தில் தொட்டார்கள், ரயிலில் சுயஇன்பம் அனுபவித்தவனை அடித்தேன்: தனுஷ் தோழி
மும்பை: பிரேம் ரத்தன் தன் பாயோ பட விளம்பர நிகழ்ச்சிக்காக சென்றபோது விமான நிலையத்தில் கூட்டத்தில் நின்றவர்கள் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்த ராஞ்ஹனா படத்தில் அவரின் தோழியாக நடித்தவர் ஸ்வரா பாஸ்கர். அவர் பிரேம் ரத்தன் தன் பாயோ படத்தில் சல்மான் கானின் தங்கையாக நடித்தார்.
இந்நிலையில் அவர் பிரேம் ரத்தன் தன் பாயோ விளம்பர நிகழ்ச்சிக்காக சென்றபோது நடந்தது பற்றி கூறும்போது,
விமான நிலையம்
பிரேம் ரத்தன் தன் பாயோ பட விளம்பர நிகழ்ச்சிக்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கோட் சென்றோம். விமான நிலையத்தில் நான், சல்மான் கானுடன் சென்றபோது அங்கு கூட்டம் கூடிவிட்டது. அப்போது சிலர் என்னை கண்ட இடத்தில் தொட்டார்கள்.
கார்
அனுபம் கேர் சார் தான் என்னை காப்பாற்றி காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். கூட்டம் என்று வந்துவிட்டால் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை. ராஞ்ஹனா படத்தில் ஹோலி காட்சியை படமாக்கும்போது எங்களை சுற்றி 5 பையன்கள் பாதுகாப்பாக நின்றார்கள்.
அறை
ஒருமுறை டெல்லியில் புக் பஜாரில் ஒருவர் என்னை கிள்ளினார். உடனே நான் அந்த நபரை பிடித்து ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டேன். இதை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை.
ரயில்
நான் மும்பைக்கு வந்த வருடம் ரயிலில் மதிய வேளையில் முதல் வகுப்பில் பயணம் செய்தேன். அந்த பெட்டியில் ஏறிய போதைப் பொருள் அடிமை ஒருவர் கூட்டம் இல்லாததை பயன்படுத்தி சுய இன்பம் அனுபவித்தார்.
அடி
அந்த ஆள் ரயிலில் சுய இன்பம் அனுபவித்ததை பார்த்த நான் பயந்துபோய் அவரை திட்டி நான் வைத்திருந்த குடையால் அடித்தேன். அவரை போலீசில் பிடித்துக் கொடுக்க அவரின் சட்டை காலரை பிடித்தேன். இதை உணர்ந்த அவர் ரயில் நின்றபோது என் கையை உதறிவிட்டு ஓடிவிட்டார் என்றார் ஸ்வரா.