Don't Miss!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
ரேணுகா விட்ட பளார்.. பளார் கலாபக் காதலன் படத்தில் நடித்து வரும் ரேணுகாவுக்கும் ஹீரோ ஆர்யாவுக்கும் ஏதோ கச முசா என்கிறார்கள். சூட்டிங் ஸ்பாட்டில்ஆர்யாவுக்கு மூஞ்சியைச் சேர்த்து ஒரு பளார் விட்டாராம் ரேணுகா.இந்தப் படத்தில் மிக நெருக்கமான காட்சிகளை வஞ்சமில்லாமல் வைத்திருக்கிறார்களாம். அப்படி ஒரு காட்சியில் கொஞ்சம்நெருக்கமாகக் கட்டிப் பிடிக்கும் காட்சியில், நரம்பெல்லாம் நொறுங்கும் அளவுக்கு ஆர்யா பலம் காட்டியதாகவும் கடுப்பாகிப்போன சேச்சி பளார் விட்டதாகவும் சொல்கிறார்கள்.ஆனால், சினிமாவில் அறை விட்டதையும் அறை வாங்கியதையும் யார் தான் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலவேஇருவருமே அதை மறுக்கிறார்கள். ஆர்யாவை அறைந்தீர்களா என்று கேட்டால், ஆர்யா ரொம்ப நல்லா நடிக்கிறாரு.. நல்லா டயலாக் பேசுறாரு என்று என்று பேச்சைமாத்துகிறார் ரேணுகா. விடாமல் கேட்டபோது, அவரைப் போய் நான் எதுக்கு அடிக்கனும் என்று திருப்பிக் கேட்கிறார்.ரேணுகா நடித்த பிப்ரவரி 14 மற்றும் தாஸ் இரண்டும் ஊத்திக் கொண்டதால் அவரை ராசியில்லா நடிகை என்று பச்சைகுத்திவிட்டார்கள் கோடம்பாக்கத்தில். அதையும் மீறி அவருக்குக்கு தமிழில் கிடைத்துள்ள படம் தான் கலாபக் காதலன். இந்தப்படத்தில் ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்கிறாராம் ரேணுகா.ஒரு பக்கம் ராசியில்லா நடிகை என்ற பெயர் இருந்தாலும் சம்பள விஷயத்தில் மகா கறார் பார்ட்டியாக இருக்கிறார் ரேணுகா. மிகஅதிகமான சம்பளம் கேட்பதால் இவரது பெயரைச் சொன்னாலே ஆடுகிறார்கள் கோலிவுட் தயாரிப்பாளர்கள். தெலுங்கில் இவர்கேட்பது கிடைப்பதால் தெலுங்குப் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வமும் காட்டுகிறார். சம்பளம் குறித்துக் கேட்டால், மும்பை நடிகைகளுக்கு மட்டும் கொட்டிக் கொடுக்கிறார்கள். ஆனால் கேரளா என்றால்சம்பளத்தைக் குறைக்கிறார்கள். நான் ரூ. 30 லட்சம் கொடு, ரூ. 40 லட்சம் கொடு என்றெல்லாம் கேட்டதில்லை. கேரவன் கொடு,ஸ்டார் ஹோட்டலில் ரூம் போடு, ஜிம் ரெடி பண்ணு, ஸ்பிம்மிங் பூல் தயார் செய் என்றெல்லாம் யாரையும் படுத்துவதில்லை.நியாயமான சம்பளத்தைத் தான் கேட்கிறேன்.நான் அதிக கவர்ச்சியெல்லாம் காட்ட மாட்டேன் அதனால் தான் என்னைத் தேடி வந்த பம்பரக் கண்ணாலே, சரவணா, மெர்க்குரிப்பூக்கள், திருவிளையாடல் ஆகிய படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன் என்கிறார். (இதெல்லாம் உண்மையா?)ரொம்ப விவரமான ரேணுகா, நடிப்போடு பேஷன் டிசைனிங்கும் செய்து வருகிறாராம். கேரளாவில் ஒரு பிரபல டெக்ஸ்டைல்ஷோ ரூமுக்கு பெரிய சம்பளத்தில் பேஷன் டிசைனராக உள்ளாராம்.
இந்தப் படத்தில் மிக நெருக்கமான காட்சிகளை வஞ்சமில்லாமல் வைத்திருக்கிறார்களாம். அப்படி ஒரு காட்சியில் கொஞ்சம்நெருக்கமாகக் கட்டிப் பிடிக்கும் காட்சியில், நரம்பெல்லாம் நொறுங்கும் அளவுக்கு ஆர்யா பலம் காட்டியதாகவும் கடுப்பாகிப்போன சேச்சி பளார் விட்டதாகவும் சொல்கிறார்கள்.
ஆனால், சினிமாவில் அறை விட்டதையும் அறை வாங்கியதையும் யார் தான் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலவேஇருவருமே அதை மறுக்கிறார்கள்.
ரேணுகா நடித்த பிப்ரவரி 14 மற்றும் தாஸ் இரண்டும் ஊத்திக் கொண்டதால் அவரை ராசியில்லா நடிகை என்று பச்சைகுத்திவிட்டார்கள் கோடம்பாக்கத்தில். அதையும் மீறி அவருக்குக்கு தமிழில் கிடைத்துள்ள படம் தான் கலாபக் காதலன். இந்தப்படத்தில் ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்கிறாராம் ரேணுகா.
ஒரு பக்கம் ராசியில்லா நடிகை என்ற பெயர் இருந்தாலும் சம்பள விஷயத்தில் மகா கறார் பார்ட்டியாக இருக்கிறார் ரேணுகா. மிகஅதிகமான சம்பளம் கேட்பதால் இவரது பெயரைச் சொன்னாலே ஆடுகிறார்கள் கோலிவுட் தயாரிப்பாளர்கள். தெலுங்கில் இவர்கேட்பது கிடைப்பதால் தெலுங்குப் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வமும் காட்டுகிறார்.
நான் அதிக கவர்ச்சியெல்லாம் காட்ட மாட்டேன் அதனால் தான் என்னைத் தேடி வந்த பம்பரக் கண்ணாலே, சரவணா, மெர்க்குரிப்பூக்கள், திருவிளையாடல் ஆகிய படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன் என்கிறார். (இதெல்லாம் உண்மையா?)
ரொம்ப விவரமான ரேணுகா, நடிப்போடு பேஷன் டிசைனிங்கும் செய்து வருகிறாராம். கேரளாவில் ஒரு பிரபல டெக்ஸ்டைல்ஷோ ரூமுக்கு பெரிய சம்பளத்தில் பேஷன் டிசைனராக உள்ளாராம்.