Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அந்த சீனை தூக்கினால்தான் விழாவுக்கு வருவேன் - அடம் பிடிக்கும் ரேஷ்மி மேனன்!
ரேஷ்மி மேனன்.... கோடம்பாக்கத்தில் இப்போது பரபரப்பு நாயகி இவர்தான். பாபி சிம்ஹாவின் வருங்கால மனைவியான இவர், இப்போது ஒரு படத்துக்கு வில்லங்கமாக நிற்கிறார்.
அந்தப் படம் கிருமி. காக்கா முட்டை புகழ் மணிகண்டன் கதை திரைக்கதை எழுதியுள்ள இந்தப் படத்தில் கதிர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்திருக்கிறார்.
படப்பிடிப்பு முடிந்து, நாளை மறுநாள் இசை வெளியீடும் நடக்கவிருக்கிறது.
இந்த நிலையில் படக்குழுவுக்கு எந்த ஒத்துழைப்பும் தர முடியாது என முரண்டு பிடிக்கிறாராம் ரேஷ்மி.
என்னதான் பிரச்சினை?
இந்தப் படம் ஆரம்பிக்கும்போது ரேஷ்மிக்கும் பாபி சிம்ஹாவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. கிருமி படத்தில் கதிருக்கும் ரேஷ்மிக்கும் ரொம்ப நெருக்கமான காதல் காட்சிகள் சில வைத்திருக்கிறார்கள். ரேஷ்மியும் எந்த மறுப்பும் சொல்லாமல் முழுமையாக ஒத்துழைத்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.
நாளை மறுநாள் படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொள்ளுமாறு தயாரிப்பாளர் தரப்பில் அழைத்திருக்கிறார்கள். ஆனால் சென்னையிலேயே இருந்தும்கூட, விழாவுக்கு வர முடியாது என்று கூறிவிட்டாராம்.
ஏன்?
நீங்கள் ஷூட் பண்ண அந்த நெருக்கமான காட்சிகளை முற்றாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆடியோ வெளியீடு மட்டுமல்ல, படம் தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் வரமாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
ஆனால் இயக்குநரைக் கேட்டால், அந்தக் காட்சிகள் கதைக்கு மிகவும் தேவை. இல்லாவிட்டால் படம் அழுத்தமாக இருக்காது. எனவே நீக்க முடியாது என்று கறாராகக் கூற, தயாரபிப்புத் தரப்பு மீண்டும் ரேஷ்மியிடம் போயிருக்கிறது.
ஆனால் ரேஷ்மியோ, என் முடிவில் மாற்றமில்லை என்று கூறிவிட, பப்ளிசிட்டிக்கான வாய்ப்பு குறைவாக உள்ளதே என கையைப் பிசைகிறது தயாரிப்புத் தரப்பு.
"இதுதான் காட்சி என விளக்கி, அதற்கு ரேஷ்மியும் ஒப்புக் கொண்டதால்தான் எடுத்தோம். இந்த மறுப்பை அப்போதே சொல்லியிருக்கலாம். ஆனால் படம் ரிலீசுக்குத் தயாராக உள்ளது. நல்ல பப்ளிசிட்டி முக்கியம். அதற்கு ஹீரோயின் வேண்டும். ஆனால் அவரோ இப்போது திடீரென இப்படி வில்லங்கம் செய்கிறார்..." என்கிறார் தயாரிப்பாளர்.