நடிப்புக்கு குட்பை... அமெரிக்காவில் படிக்கப் போறேன்! - ரிச்சா கங்கோபாத்யாய்
தமிழில் திடீர் கவர்ச்சிப் புயலாய் வந்து கிறங்கடித்து, அதே வேகத்தில் காணாமல் போன ரிச்சா கங்கோபாத்யாய் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டார். படிக்க அமெரிக்கா போவதாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.
மயக்கம் என்ன படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யா. அழகு, நடிப்பு, இளமை என ஒரு முதல்நிலை நடிகைக்குரிய அனைத்து லட்சணங்களோடும் நடிக்க வந்த அவருக்கு ஆரம்பத்தில் ஏக டிமான்ட்.

ஆனால் அத்தனையையும் கெடுத்தது ஒஸ்தி படமும், ரிச்சாவைச் சுற்றியிருந்த நண்பர்களும்தான்.
இந்த இரு படங்களுக்குப் பிறகு அவர் வேறு தமிழ்ப் படங்களில் நடிக்கவே இல்லை. தெலுங்கில் மூன்றும், வங்காள மொழியில் ஒரு படமும் நடித்தார்.
தெலுங்கில் அவர் இப்போது பாய் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில், இனி கொஞ்ச நாளைக்கு நடிப்பு வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ள ரிச்சா, "நடிப்புக்காக படிப்பை விட முடியாது. எனவே அமெரிக்காவில் ஏற்கெனவே படித்துக் கொண்டிருந்த கல்லூரிப் படிப்பை தொடரப் போகிறேன். இது நிரந்தர குட்பை என்று சொல்ல முடியாது. படிப்பு முடிந்த பிறகு பார்க்கலாம்," என்று தெரிவித்துள்ளார்.
ரிச்சாவுக்கு இப்போது 27 வயதாகிறது. பிறந்தது டெல்லியில் என்றாலும், தனது ஆரம்ப காலத்தில் கொஞ்ச நாள் கோவையில் வசித்தார் ரிச்சா. அதன் பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டனர். இப்போது பெற்றோர் வழியில் அமெரிக்காவிலேயே செட்டிலாகப் போகிறார் ரிச்சா.


Click it and Unblock the Notifications
