எதுக்கு இந்தப் பொழப்பு? - டாப்ஸி மீது பாயும் ரிச்சா
சினிமாவுக்கு வெளியே நடிகைகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது நாம் அடிக்கடி பார்க்கும் 'சீன்'தான்... அந்த வகையில் இந்த சம்மர் சீஸன் சீன்... டாப்ஸி - ரிச்சா மோதல்!
ஆடுகளம், வந்தான் வென்றான் என இரு படங்களில் டாப்ஸி நடித்துள்ளார். ரிச்சாவும் மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் ரசிகர்களைப் பொறுத்தவரை, டாப்ஸியை விட, ரிச்சாவுக்குதான் அதிக ஓட்டு. அவர் கவர்ச்சியில் 'ரிச்' எக்கச்சக்கம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ரசிகர்கள் மட்டுமல்ல, இயக்குநர்கள் - தயாரிப்பாளர்களுக்கும் கூட ரிச்சாதான் முதல் சாய்ஸ்.
தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது நாயகியாக ரிச்சாவைத்தான் முடிவு செய்து வைத்திருந்தனர். அஜீத் படத்தில் நடிப்பதன் மூலம், தன் ரேஞ்ச் கொஞ்சம் உயரப் போகும் சந்தோஷத்தில் இருந்தார் ரிச்சா.
அதில் மண்ணள்ளிப் போட்டார் டாப்ஸி. எப்படியோ விஷ்ணுவர்தனை சரிகட்டி, படத்தில் இரண்டாவது நாயகி வாய்ப்பைப் பெற்றுவிட்டார்.
ரிச்சா இதில் கடும் கோபமடைந்துள்ளாராம். அடுத்தவர் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் இது ஒரு பிழைப்பா? என டாப்ஸியைப் போட்டுத் தாக்க ஆரம்பித்துள்ளாராம்!
பிழை செய்தால்தான் பிழைக்க முடியும் என்பது சினிமா நீதி!!


Click it and Unblock the Notifications











