Don't Miss!
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காதலனைப் பிரிந்தார் ரிச்சா... 'மயக்கம் என்ன' ஸ்டைலில் புது காதல்?
நடிகை ரிச்சா தன் காதலன் சுந்தரைப் பிரிந்துவிட்டாராம். இப்போது புதிதாக அவர் வேறொரு நடிகருடன் நெருக்கமாகிவிட்டதால், ஆத்திரத்தில் ரிச்சா கொடுத்த பரிசுப் பொருளை வீசி எறிந்து உடைத்துவிட்டார் சுந்தர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மயக்கம் என்ன படத்தில் அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். அந்தப் படத்தில் ஆரம்பத்தில் ரிச்சாவின் காதலான வருவார் சுந்தர். பின்னர் சுந்தரின் நண்பனான தனுஷ் ரிச்சாவைக் கல்யாணம் செய்து கொள்வார்.
நிஜத்திலும் கிட்டத்தட்ட இதே மாதிரி நடந்துவிட்டதாம்.
படத்தில் நடிக்கும்போதே ரிச்சாவுக்கும் சுந்தருக்கும் ஆழமான காதல் ஏற்பட்டுவிட்டதாம். ரிச்சா சென்னைக்கு வந்துவிட்டால் இருவரும் இணைந்து உலா வந்து கொண்டிருந்தனர். சுந்தருக்கு அதிக விலை கொண்ட காமிராவை பரிசாகத் தந்திருந்தாராம் ரிச்சா (சுந்தர் அடிப்படையில் ஒரு மாடல் போட்டோகிராபர்).
இந்த நிலையில் ரிச்சா படங்களில் பிஸியாகிவிட்டதால், காதல் கொஞ்சம் டல்லடித்தது. போகப் போக ரிச்சா, சுந்தரை தவிர்க்க ஆரம்பித்தாராம். சென்னை வந்தால், சுந்தரைப் பார்க்காமலே போகத் தொடங்கிவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர், ரிச்சா கொடுத்த பரிசுப் பொருள்களைக் கூட தூக்கிப் போட்டு உடைத்துவிட்டாராம்.
ரிச்சா தனக்குக் கிடைக்காவிட்டால் 3 படப் பாணியில் கழுத்தை அறுத்துக் கொள்ளக் கூடத் தயார் என்று கூறி, அதற்கு சாம்பிளாக கையைக் கிழித்துக் கொண்டாராம்.
ஆனால் இதெல்லாம் சும்மா வதந்திங்க... ரிச்சாவுக்கு இது பற்றியெல்லாம் யோசிக்கக் கூட நேரமில்லை என்கிறார் ரிச்சாவின் மேனேஜர்.
சுந்தர் தரப்போ, ரிச்சா அப்படிச் சொன்னா, அதையே எழுதிக்கங்க. என்கிட்ட கேக்க என்ன இருக்கு? என்கிறாராம்!
இதற்கிடையே ரிச்சாவுக்கு பாடிகார்டாக வர ஆரம்பித்திருக்கிறாராம் ஒரு புதிய நடிகர்!!