காதலர் தினம்.. கணவரோடு கடற்கரையில் 'செக்ஸ்' ..இது கல்லிங்கல் கலாட்டா
திருவனந்தபுரம்: மலையாள நடிகை ரீமா கல்லிங்கலுக்கு தைரியம் ரொம்பத்தான் ஜாஸ்தி. பின்னே கடற்கரையில் செக்ஸ் வைத்துக் கொண்டதாக தனது பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு களேபரப்படுத்தி விட்டார்.
பட்.. அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லையாம்.. மேட்டரே வேறு.
சமீபத்தில்தான் இவருக்கும் ஆசிஷ் அபு என்பவருக்கும் இடையே திருமணம் நடந்தது. இருவரும் சேர்ந்து பிப்ரவரி 14ம் தேதியை தங்களது முதல் காதலர் தினமாக இணைந்து கொண்டாடினர்.

யுவன் யுவதி
யுவன் யுவதி தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளார் ரீமா கல்லிங்கல். அபுவை நீண்ட காலமாக காதலித்து வந்த கல்லிங்கல் சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டார்.

வித்தியாசமான மெசேஜ்
இந்த நிலையில் கல்லிங்கலின் பேஸ்புக் ஸ்டேட்டஸில் திடீரென ஒரு மெசேஜ் வந்து அனைவரையும் டெர்ரர் ஆக்கியது. அந்த மெசேஜில், "Sex on the Beach". என்று வார்த்தை போடப்பட்டிருந்தது.

அதெப்படி இப்படி பகிரங்கமா
இதைப் பார்த்து விட்டு பலரும் ரீமாவை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். நீங்க பெர்சனலா செஞ்சதை எல்லாம் ஏன் இப்படி பகிரங்கமாக சொல்லி அசிங்கப்படுத்துகிறீர்கள் என்று திட்டவும் ஆரம்பித்து விட்டனர்.

சீ.. சீ.. சீப் பப்ளிசிட்டி தேவையா
மேலும் பலர் இப்படிப்பட்ட சீப்பான பப்ளிசிட்டி உங்களுக்குத் தேவையா என்றும் திட்டினர்.

அட அப்ரசண்டிகளா.. அது வேறய்யா...
இதைப் பார்த்து குழம்பிப் போன ரீ்மா, அடுத்து ஒரு விளக்கப் படத்தைப் போட்டார். அதில், தானும், தனது கணவரும், சேர்ந்து "Sex on the Beach". என்ற பெயரிலான மது அருந்திக் கொண்டிருப்பது போல இருந்தது.

இருந்தாலும் டவுட்டாயிருக்கே...
அதன் பிறகுதான் ரீமா போட்டிருந்தது கடற்கரையில் வைத்துக் கொண்ட செக்ஸ் குறித்து அல்ல, மது வகை என்று அனைவருக்கும் புரிந்தது.
இருந்தாலும், ஒரு வேளை நடந்திருக்குமோ என்ற சந்தேகத்துடன் பலரும் உலா வந்து கொண்டுள்ளனராம்.


Click it and Unblock the Notifications











