Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நித்யா மேனன் என்ன தவறு செய்தார்?- ரீமா கல்லிங்கல் ஆதரவு
மலையாள நடிகைகள் நித்யா மேனன், ரீமா கல்லிங்கல் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளரை சந்தித்துப் பேச மறுத்ததற்காக தடை விதிக்கப்பட்டுள்ள நித்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் ரீமா.
படப்பிடிப்புக்கு வராமல் வேறு நிகழ்ச்சிக்குப் போனதால் ரீமா மீதும் நடிகர் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளதால் அவருக்கும் தடை ஆபத்து நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்பம், 180 ஆகிய படங்களில் நடித்தவர் நித்யா மேனன். இவர் மூ்த்த தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க மறுத்ததாக கூறி தடை விதித்து விட்டனர். இந்த நிலையில் ரீமா கல்லிங்கல் இந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகையான ரீமா கல்லிங்கல் தமிழில் யுவன் யுவதி படத்தில் நடித்துள்ளார்.
நித்யா மீதான தடை குறித்து ரீமா கூறுகையில், சுதந்திரமான ஜனநாயக நாட்டில் வசிக்கிறேன் என்று நம்புகிறேன். நடிகைகளுக்கு சில சொந்த விஷயங்கள் உள்ளன. யாரை எங்கே எப்படி சந்திக்க வேண்டும் என்பது நடிகைகளின் தனிப்பட்ட விருப்பம். அதைத்தான் நித்யாமேனன் செய்துள்ளார். இதற்கெல்லாம் போய் தடை விதிக்கலாமா என்று கேட்டுள்ளார்.
நித்யாவுக்கு ஆதரவாக ரீமா பேசியிருப்பது மலையாளத் தயாரிப்பாளர்களை மேலும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளதாம்.
சந்தித்துப் பேச மறுத்ததெற்கெல்லாம் தடையா, எந்தா சாரே இது...!