twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நித்யா மேனன் என்ன தவறு செய்தார்?- ரீமா கல்லிங்கல் ஆதரவு

    By Sudha
    |

    மலையாள நடிகைகள் நித்யா மேனன், ரீமா கல்லிங்கல் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளரை சந்தித்துப் பேச மறுத்ததற்காக தடை விதிக்கப்பட்டுள்ள நித்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் ரீமா.

    படப்பிடிப்புக்கு வராமல் வேறு நிகழ்ச்சிக்குப் போனதால் ரீமா மீதும் நடிகர் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளதால் அவருக்கும் தடை ஆபத்து நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    வெப்பம், 180 ஆகிய படங்களில் நடித்தவர் நித்யா மேனன். இவர் மூ்த்த தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க மறுத்ததாக கூறி தடை விதித்து விட்டனர். இந்த நிலையில் ரீமா கல்லிங்கல் இந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

    மலையாள நடிகையான ரீமா கல்லிங்கல் தமிழில் யுவன் யுவதி படத்தில் நடித்துள்ளார்.

    நித்யா மீதான தடை குறித்து ரீமா கூறுகையில், சுதந்திரமான ஜனநாயக நாட்டில் வசிக்கிறேன் என்று நம்புகிறேன். நடிகைகளுக்கு சில சொந்த விஷயங்கள் உள்ளன. யாரை எங்கே எப்படி சந்திக்க வேண்டும் என்பது நடிகைகளின் தனிப்பட்ட விருப்பம். அதைத்தான் நித்யாமேனன் செய்துள்ளார். இதற்கெல்லாம் போய் தடை விதிக்கலாமா என்று கேட்டுள்ளார்.

    நித்யாவுக்கு ஆதரவாக ரீமா பேசியிருப்பது மலையாளத் தயாரிப்பாளர்களை மேலும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளதாம்.

    சந்தித்துப் பேச மறுத்ததெற்கெல்லாம் தடையா, எந்தா சாரே இது...!

    English summary
    Malayalam actress Rima Kallingal has extended her support to banned actress Nithya Menon. Rima has said that, every person in this country has their own wishes. No one can dictate anybody. This support has irritated Malayalam producers association. They are now discussing a ban on Rima too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X