Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நித்யா மேனன் என்ன தவறு செய்தார்?- ரீமா கல்லிங்கல் ஆதரவு
மலையாள நடிகைகள் நித்யா மேனன், ரீமா கல்லிங்கல் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளரை சந்தித்துப் பேச மறுத்ததற்காக தடை விதிக்கப்பட்டுள்ள நித்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் ரீமா.
படப்பிடிப்புக்கு வராமல் வேறு நிகழ்ச்சிக்குப் போனதால் ரீமா மீதும் நடிகர் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளதால் அவருக்கும் தடை ஆபத்து நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்பம், 180 ஆகிய படங்களில் நடித்தவர் நித்யா மேனன். இவர் மூ்த்த தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க மறுத்ததாக கூறி தடை விதித்து விட்டனர். இந்த நிலையில் ரீமா கல்லிங்கல் இந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகையான ரீமா கல்லிங்கல் தமிழில் யுவன் யுவதி படத்தில் நடித்துள்ளார்.
நித்யா மீதான தடை குறித்து ரீமா கூறுகையில், சுதந்திரமான ஜனநாயக நாட்டில் வசிக்கிறேன் என்று நம்புகிறேன். நடிகைகளுக்கு சில சொந்த விஷயங்கள் உள்ளன. யாரை எங்கே எப்படி சந்திக்க வேண்டும் என்பது நடிகைகளின் தனிப்பட்ட விருப்பம். அதைத்தான் நித்யாமேனன் செய்துள்ளார். இதற்கெல்லாம் போய் தடை விதிக்கலாமா என்று கேட்டுள்ளார்.
நித்யாவுக்கு ஆதரவாக ரீமா பேசியிருப்பது மலையாளத் தயாரிப்பாளர்களை மேலும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளதாம்.
சந்தித்துப் பேச மறுத்ததெற்கெல்லாம் தடையா, எந்தா சாரே இது...!