எம்பி எகிறும் ரிம்பி!
வில்லனே இல்லாத காதல் படமாக உருவாகி வருகிறது பாலி. இதில் ரிம்பி என்றகட்டழகி, நடிப்பிலும், கிளாமரிலும் கெட்ட போடு போட்டு வருகிறார்.
விஜயசாரதி ஆர்ட்ஸ் தயாரிக்கும் படம்தான் பாலி. முழுக்க முழுக்க காதலை மட்டுமேமையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் வில்லனே கிடையாதாம். அதாவதுகாதலுக்கு ஒரு எதிர்ப்பும் கிடையாது.காதலுக்கு அடுத்து இப்படத்தில் இசைக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்களாம்.கட்டுப்பாடில்லாதது காதல் என்பதுதான் கதையின் மையப்புள்ளி.
அதாவது கதை என்னன்னா, கோத்தகிரி மலையில் வசிக்கும் மலைவாசிப் பெண்தான்ஹீரோயின். அங்கு இசை ஆராய்ச்சிக்காக லண்டனிலிருந்து வந்து சேருகிறார் ஹீரோ(வந்துடாய்யா, வந்துட்டாய்யா!)
ஹீரோவைப் பார்த்து மோகம் கொள்கிறார் நாயகி. பிறகென்ன காதல் மலருகிறது.ஹீரோவும் தனது ஆராய்ச்சியை விட்டு விட்டு காதலில் திளைக்கிறார். ஹீரோவின் மீதுஹீரோயினாக்கோ, தீத்தனமான காதல்.
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு (ஆராய்ச்சியை!) லண்டனுக்குக் கிளம்புகிறார்ஹீரோ. நானும் கூடவே வருவேன் என்கிறார் நாயகி. அதற்கு அந்த ஹீரோவோ,நான்தான் காதலிக்கலையேம்மா என்று டயலாக் விடுகிறார்.
அதிர்ச்சியாகும் ஹீரோயின் என்ன செய்கிறார் என்பதே கதை.
இதில் ஹீரோவும், ஹீரோயினும் புதுமுகங்கள். ஸ்ரீ என்பவர் நாயகனாக நடிக்கிறார்.அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் ரிம்பி என்ற அழகுச் சிலை. படு மதர்ப்பாகஇருக்கிறார் ரிம்பி. கிளாமரை கொட்டிக் கவிழ்த்துள்ளாராம் இந்த எடுப்பான அழகி.
வனவாசிக் கதை என்பதால் ரிம்பிக்கு காஸ்ட்யூம் என்பது ரொம்பவே குறைச்சலே.அதனால் கிளாமருக்கு நோ பவுண்டரி! ரிம்பியும் எம்பி எகிறியிருக்கிறாரம்.
படம் முழுக்க கிளாமர் பரவி, விரவிக் கிடந்தாலும் நல்ல மெசேஜ் ஒன்றையும்படத்தில வைத்துள்ளாராம் இயக்குனர்.
அதாவது மசாஜ் பண்ணி மெசேஜ்..


Click it and Unblock the Notifications