அது மட்டும் என்னால் முடியவே முடியாது: ஷூட்டிங்கில் அடம்பிடித்த நடிகை
Recommended Video

ஷூட்டிங்கில் அடம்பிடித்த ரித்விகா !!- வீடியோ
சென்னை: ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிக்க மறுத்து அடம்பிடித்துள்ளார் ரித்விகா.
பரதேசி, நினைத்தது யாரோ, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, கபாலி, இருமுகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ரித்விகா. அவர் தற்போது நடித்துள்ள படம் ஓநாய்கள் ஜாக்கிரதை.

ஜேபிஆர் இயக்கிய இந்த படத்தில் விஷ்வந்த் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தில் இயக்குனர் வெங்கேடஷும் உள்ளார். காட்சியின்படி ரித்விகா இயக்குனர் வெங்கடேஷை கீழே தள்ளி மிதிக்க வேண்டும்.
இயக்குனர் கூறியதை கேட்ட ரித்விகாவோ வெங்கடேஷ் வயதில் பெரியவர், அவரை மிதிக்க மாட்டேன் என்று கூறி அடம்பிடித்துள்ளார். படத்திற்கு இந்த காட்சி ரொம்ப முக்கியம்மா என்று இயக்குனர் விளக்கி கூறியுள்ளார்.
அதன் பிறகே அவர் அந்த காட்சியில் நடித்தாராம். ஓநாய்கள் ஜாக்கிரதை படம் நாளை ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











