Don't Miss!
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
விசைத் தறியில் நெசவு நெய்து வாக்கு சேகரித்த ரோஜா!
நகரி: தான் போட்டியிடும் நகரி தொகுதியில் நெசவாளர்கள் வீடுகளுப்போய் நெசவு நெய்து வாக்கு கேட்டார் நடிகை ரோஜா.
ஆந்திர மாநிலம் சீமாந்திராவில் உள்ள 25 பாராளுமன்றம் மற்றும் 175 சட்ட சபை தொகுதியில் நாளை (7-ந்தேதி) தேர்தல் நடக்கிறது.
இங்கு நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிடுகிறார். இங்கு நேற்று மாலையுடன் பிரசாரம் முடிந்தது.
நடிகை ரோஜா இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட ரோஜா, சந்திரவாடாவில் இருந்து ஓம்சக்தி கோவில் வரை பேரணியாக வந்து வாக்கு கேட்டார்.
நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் சந்திரவாடாவில் நடிகை ரோஜா நெசவாளர் வீடுகளுக்குச் சென்றார்.
ஒரு வீட்டுக்குள் நுழைந்தவர், அங்கிருந்த விசைத்தறியில் அமர்ந்து நெய்து பார்த்தார். நெசவாளர்களின் கஷ்டங்களைக் கேட்டறிந்தார்.
தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவார். எனவே மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் தன்னை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள். உங்களுக்காக நான் போராடுவேன், என்றார்.
ரோஜாவுடன் அவர் கணவர் செல்வமணி, மகள் அன்ஷுமாலிகா மற்றும் உறவினர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.