Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விசைத் தறியில் நெசவு நெய்து வாக்கு சேகரித்த ரோஜா!
நகரி: தான் போட்டியிடும் நகரி தொகுதியில் நெசவாளர்கள் வீடுகளுப்போய் நெசவு நெய்து வாக்கு கேட்டார் நடிகை ரோஜா.
ஆந்திர மாநிலம் சீமாந்திராவில் உள்ள 25 பாராளுமன்றம் மற்றும் 175 சட்ட சபை தொகுதியில் நாளை (7-ந்தேதி) தேர்தல் நடக்கிறது.
இங்கு நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிடுகிறார். இங்கு நேற்று மாலையுடன் பிரசாரம் முடிந்தது.
நடிகை ரோஜா இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட ரோஜா, சந்திரவாடாவில் இருந்து ஓம்சக்தி கோவில் வரை பேரணியாக வந்து வாக்கு கேட்டார்.
நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் சந்திரவாடாவில் நடிகை ரோஜா நெசவாளர் வீடுகளுக்குச் சென்றார்.
ஒரு வீட்டுக்குள் நுழைந்தவர், அங்கிருந்த விசைத்தறியில் அமர்ந்து நெய்து பார்த்தார். நெசவாளர்களின் கஷ்டங்களைக் கேட்டறிந்தார்.
தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவார். எனவே மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் தன்னை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள். உங்களுக்காக நான் போராடுவேன், என்றார்.
ரோஜாவுடன் அவர் கணவர் செல்வமணி, மகள் அன்ஷுமாலிகா மற்றும் உறவினர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.