Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரச்சாரம்... வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்தார் ரோஜா!
நகரி: கொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ரோஜா, வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்தார். அவருக்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்தனர்.
நடிகையும் இயக்குனர் செல்வமணியின் மனைவியுமான ரோஜா, ஆந்திர மாநில நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 7-ந்தேதி (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.
கடந்த 2 மாதங்களாக இந்தத் தொகுதியில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் ரோஜா. நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார்.
நகரியை அடுத்த சத்திரவாடாவில் நேற்று மதியம் நடிகை ரோஜா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் அந்தப்பகுதியில் வீடு வீடாக நடந்து சென்ற அவர், தனது கட்சி சின்னமான 'மின்விசிறி'க்கு ஓட்டளிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.
அப்போது ரோஜா திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கட்சி தொண்டர்கள், அருகில் உள்ள ஒரு வீட்டுக்குள் தூக்கிச்சென்று படுக்க வைத்து மருத்துவர்களை அழைத்து வந்தனர்.
விரைந்த வந்த டாக்டர்கள் ரோஜா உடல்நிலையைப் பரிசோதித்தனர். வெயில் உஷ்ணம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக மயங்கி விழுந்ததாக தெரிவித்தனர். அங்கேயே அவருக்கு 2 பாட்டில் 'குளுகோஸ்' ஏற்றப்பட்டது.
தொடர்ந்து அவர் 2 மணி நேரம் ஓய்வு எடுத்தார். அதற்குப்பிறகு தெம்படைந்த ரோஜா பிரச்சாரத்துக்குக் கிளம்பினார்.
கட்சி நிர்வாகிகள் கே.ஜே.குமார், சக்கரபாணி செட்டி, அம்முலு ஆகியோர் அவரை ஓய்வு எடுக்குமாறும், பிரசாரத்தை மறுநாள் தொடரலாம் என்றும் ஆலோசனை கூறினர்.
ஆனால் நடிகை ரோஜா அதற்கு மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து அங்கிருந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று 'மின்விசிறி' சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு வாக்காளர்களை கேட்டுக்கொண்டபடி பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.
தொடர்ந்து இரு முறை தேர்தலில் தோற்ற ரோஜா, இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றே தீருவது என்ற முனைப்போடு பிரச்சாரம் செய்து வருகிறார்.