கள்ளக்காதலரின் மனைவி கொல்லப்பட்ட வழக்கு- நடிகை நிலா முன்ஜாமீன் கோரி மனு

மீரா சோப்ரா எனப்படும் நடிகை நிலாவின் நண்பர் சுமித் பட்டன். இவரது மனைவி ருச்சி. இவர் சமீபத்தில் தனது வீட்டில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி தற்கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
இருப்பினும் சுமித்தும், நடிகை நிலாவும் கள்ளக்காதலர்கள். இதன் விளைவாகவே ருச்சி கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் நிலாவுக்கும், சுமித்துக்கும் தொடர்பு உள்ளது என்று ருச்சியின் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து இதை கொலை வழக்காக மாற்றினர் போலீஸார். மேலும் சுமித்தும் கைது செய்யப்பட்டார். நிலாவையும் கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து நடிகை நிலா தலைமறைவானார். இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி நிலா பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications