Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சம்பளம் வேண்டாம் படத்தில பங்கு தாங்க – ஒரே போடாக போடும் நடிகை அனுஷ்கா!
ஹைதராபாத்: நடிகை அனுஷ்கா தற்போது ஒரே நேரத்தில் பாகுபலி மற்றும் ருத்ரம்மா தேவி என இரண்டு சரித்திரப் படங்களில் நடித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இதில் முதலில் ருத்ரம்மா தேவி படம் வெளிவர இருக்கிறது. 3 D படமாக வெளியாகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு இந்தப் படத்தில் ராணி வேடத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது, போதாதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் இதில் ஒரு சிறப்பு வேடத்தில் வருகிறார். மற்றும் ஏராளமான நட்சத்திரங்களும் நடித்திருக்கும் இப்படம் ஓரளவு பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதில் நடிப்பதற்கு இதுவரையில் சம்பளம் எதுவும் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கும் அனுஷ்கா அதற்குப் பதில் படத்தின் லாபத்தில் பங்கு கேட்கிறாராம்.
படம் எப்படியும் நல்ல லாபத்தைக் கொட்டிக் கொடுக்கும் அதனால் சம்பளம் வேண்டாம் என்று முடிவு செய்திருக்கும் அனுஷ்கா, வசூலில் ஒரு குறிப்பிட்ட தொகையை எதிர்பார்க்கிறார் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.