Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சதாவின் சலிப்பு! எப்படி நடித்தும் இந்தத் தமிழ்ப் பட தயாரிப்பாளர்கள் நமக்கு சரியான வாய்ப்பு தர மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்களேஎன்று சதா சலித்துக் கொள்கிறார்.ஜெயம் வந்த புதிதில் கவர்ச்சி என்றாலே எனக்கு ஆகாது, எனக்கும் கிளாமருக்கும் ரொம்ப தூரம் என்று தடாலடியாக பேட்டிகொடுத்தார். ரேவதி மாதிரி, சாவித்ரி மாதிரிதான் நடிப்பேன் என்றும் சூளுரைத்தார் சதா. அந்நியன் படத்தில் கூட சதாவிடமிருந்துகிளாமரை வாங்குவதற்குள் ஷங்கர் படாதபாடு பட்டு விட்டார்.ஒரு வழியாக சதாவை அன்பாகவும், உருட்டியும், மிரட்டியும் அவரிடமிருந்து கவர்ச்சியைக் கறந்து விட்டார். ஆனால் என்னபிரயோஜனம், ரசிகர்கள் கவிழ்த்து விட்டு விட்டார்கள். சந்திரமுகி வெளியாகி இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்க, அந்நியனுக்கு அதற்குள் கூட்டத்தைக் காணோம்.மீண்டும் சதா! அந்நியன் மூலம் கவர்ச்சி கோதாவில் குதித்த சதா, அப்படியே பிரிய சகியில், மாதவனுடன் படு நெருக்கமாகநடித்து பரபரப்பூட்டினார். இழுத்து மூடி நடித்ததால்தான் சரியான வாய்ப்புகள் வரவில்லை, கிளாமராக நடித்தாலவது மார்க்கெட்சூடு பிடிக்கிறதா என்று பார்ப்போம் என்ற எண்ணத்தில்தான் கவர்ச்சிக்கு மாறினார்.ம்ஹூம், வர்ற வாய்ப்புதானே வரும். சதா போடும் பந்தாக்களால் பயந்து போன தயாரிப்பாளர்கள் அவரிடம் போகவேபிரியப்படவில்லை. அதை விட முக்கியமாக, ஹீரோக்களும் சதாவுடன் நடிப்பதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.இதனால் சதாவுக்கு கையில் இப்போது ஒரு படமும் இல்லை என்றாகி விட்டதாம்.இதனால் கடுப்பாகிப் போன சதா, மும்பை, கேரள குயில்களுக்கு இணையாக தானும் கவர்ச்சியில் புகுந்து விளையாடுவது என்றமுடிவுக்கு வந்து விட்டாராம். தனக்காக வாய்ப்பு தேடுவதற்கு சிலரை நியமித்துள்ள சதா, அவர்களுக்கு சம்பளத்தையும்உயர்த்தியுள்ளாராம். எப்படிப்பட்ட கிளாமர் ரோல் என்றாலும் பரவாயில்லை, நான் நடிக்கத் தயார், நல்ல வாய்ப்பாக பிடித்துக்கொண்டு வாருங்கள் என்று அவர்களை ஏவி விட்டுள்ளாராம்.என்னாச்சு சதா என்று அவரிடம் கேட்கப் போனால், அட போங்க சார், குத்து விளக்காக அம்சமா நடித்தால் கிளாமர் காட்டமாட்டீங்களா என்று கேட்கிறார்கள், கிளாமரில் இறங்கினால் நீங்களும் கிளாமர் காட்ட வந்து வந்து விட்டீர்களா என்றுகேட்கிறார்கள். அட, எப்படி நடித்தாலும் சரியான பட வாய்ப்பு கிடைக்க மாட்டேன் என்கிறதே என்று அலுத்துக் கொள்கிறார்.சென்சார்காரங்கதான் பாவம், கண்ணுல விளக்கெண்ணையோட இருக்கணும்!
எப்படி நடித்தும் இந்தத் தமிழ்ப் பட தயாரிப்பாளர்கள் நமக்கு சரியான வாய்ப்பு தர மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்களேஎன்று சதா சலித்துக் கொள்கிறார்.
ஜெயம் வந்த புதிதில் கவர்ச்சி என்றாலே எனக்கு ஆகாது, எனக்கும் கிளாமருக்கும் ரொம்ப தூரம் என்று தடாலடியாக பேட்டிகொடுத்தார். ரேவதி மாதிரி, சாவித்ரி மாதிரிதான் நடிப்பேன் என்றும் சூளுரைத்தார் சதா. அந்நியன் படத்தில் கூட சதாவிடமிருந்துகிளாமரை வாங்குவதற்குள் ஷங்கர் படாதபாடு பட்டு விட்டார்.
ஒரு வழியாக சதாவை அன்பாகவும், உருட்டியும், மிரட்டியும் அவரிடமிருந்து கவர்ச்சியைக் கறந்து விட்டார். ஆனால் என்னபிரயோஜனம், ரசிகர்கள் கவிழ்த்து விட்டு விட்டார்கள். சந்திரமுகி வெளியாகி இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்க, அந்நியனுக்கு அதற்குள் கூட்டத்தைக் காணோம்.
மீண்டும் சதா! அந்நியன் மூலம் கவர்ச்சி கோதாவில் குதித்த சதா, அப்படியே பிரிய சகியில், மாதவனுடன் படு நெருக்கமாகநடித்து பரபரப்பூட்டினார். இழுத்து மூடி நடித்ததால்தான் சரியான வாய்ப்புகள் வரவில்லை, கிளாமராக நடித்தாலவது மார்க்கெட்சூடு பிடிக்கிறதா என்று பார்ப்போம் என்ற எண்ணத்தில்தான் கவர்ச்சிக்கு மாறினார்.
ம்ஹூம், வர்ற வாய்ப்புதானே வரும். சதா போடும் பந்தாக்களால் பயந்து போன தயாரிப்பாளர்கள் அவரிடம் போகவேபிரியப்படவில்லை. அதை விட முக்கியமாக, ஹீரோக்களும் சதாவுடன் நடிப்பதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.இதனால் சதாவுக்கு கையில் இப்போது ஒரு படமும் இல்லை என்றாகி விட்டதாம்.
இதனால் கடுப்பாகிப் போன சதா, மும்பை, கேரள குயில்களுக்கு இணையாக தானும் கவர்ச்சியில் புகுந்து விளையாடுவது என்றமுடிவுக்கு வந்து விட்டாராம். தனக்காக வாய்ப்பு தேடுவதற்கு சிலரை நியமித்துள்ள சதா, அவர்களுக்கு சம்பளத்தையும்உயர்த்தியுள்ளாராம். எப்படிப்பட்ட கிளாமர் ரோல் என்றாலும் பரவாயில்லை, நான் நடிக்கத் தயார், நல்ல வாய்ப்பாக பிடித்துக்கொண்டு வாருங்கள் என்று அவர்களை ஏவி விட்டுள்ளாராம்.
என்னாச்சு சதா என்று அவரிடம் கேட்கப் போனால், அட போங்க சார், குத்து விளக்காக அம்சமா நடித்தால் கிளாமர் காட்டமாட்டீங்களா என்று கேட்கிறார்கள், கிளாமரில் இறங்கினால் நீங்களும் கிளாமர் காட்ட வந்து வந்து விட்டீர்களா என்றுகேட்கிறார்கள். அட, எப்படி நடித்தாலும் சரியான பட வாய்ப்பு கிடைக்க மாட்டேன் என்கிறதே என்று அலுத்துக் கொள்கிறார்.
சென்சார்காரங்கதான் பாவம், கண்ணுல விளக்கெண்ணையோட இருக்கணும்!