Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எந்த ஹீரோயினும் செய்யத் தயங்குவதை செய்த சாய் பல்லவி
சென்னை: எந்த ஹீரோயினும் செய்யத் தயங்குவதை செய்துள்ளார் சாய் பல்லவி.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள படம் கரு. சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ள முதல் தமிழ் படம் இது. இந்த படத்தில் அவர் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார்.
படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ள நேரத்தில் பெயரையும் மாற்றியுள்ளனர். படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
|
கரு
கரு படத்தின் பெயரை தியா என்று மாற்றியுள்ளனர். சினிமா ஸ்டிரைக்கால் ரிலீஸாகாமல் இருந்த படம் வரும் 27ம் தேதி ரிலீஸாக உள்ளது. பேய் படம் என்றால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்நிலையில் தியா ரிலீஸாக உள்ளது.
நீதிமன்றம்
கரு என்கிற தலைப்பை தாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும் அதை வேறு யாரும் பயன்படுத்த தடை விதிக்குமாறும் கூறி ஜே.எஸ். ஸ்கிரீன்ஸ் என்ற நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் கரு படத்தின் தலைப்பை தியா என்று மாற்றியுள்ளனர்.
அம்மா
எந்த நடிகையும் தான் ஹீரோயினாகும் முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க மாட்டார். அப்படி இருக்கும்போது சாய் பல்லவி தான் ஹீரோயினாக நடித்துள்ள முதல் தமிழ் படத்திலேயே தாயாக நடித்துள்ளார்.
வித்தியாசம்
தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக உள்ள சாய் பல்லவி வித்தியாசமான வழியில் செல்கிறார். அட்ஜஸ்ட் செய்ய மறுப்பதால் தான் அவர் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன என்று கூறப்படுகிறது.