twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எந்த ஹீரோயினும் செய்யத் தயங்குவதை செய்த சாய் பல்லவி

    By Siva
    |

    சென்னை: எந்த ஹீரோயினும் செய்யத் தயங்குவதை செய்துள்ளார் சாய் பல்லவி.

    ஏ.எல். விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள படம் கரு. சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ள முதல் தமிழ் படம் இது. இந்த படத்தில் அவர் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார்.

    படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ள நேரத்தில் பெயரையும் மாற்றியுள்ளனர். படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

    கரு

    கரு படத்தின் பெயரை தியா என்று மாற்றியுள்ளனர். சினிமா ஸ்டிரைக்கால் ரிலீஸாகாமல் இருந்த படம் வரும் 27ம் தேதி ரிலீஸாக உள்ளது. பேய் படம் என்றால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்நிலையில் தியா ரிலீஸாக உள்ளது.

    நீதிமன்றம்

    நீதிமன்றம்

    கரு என்கிற தலைப்பை தாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும் அதை வேறு யாரும் பயன்படுத்த தடை விதிக்குமாறும் கூறி ஜே.எஸ். ஸ்கிரீன்ஸ் என்ற நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் கரு படத்தின் தலைப்பை தியா என்று மாற்றியுள்ளனர்.

    அம்மா

    அம்மா

    எந்த நடிகையும் தான் ஹீரோயினாகும் முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க மாட்டார். அப்படி இருக்கும்போது சாய் பல்லவி தான் ஹீரோயினாக நடித்துள்ள முதல் தமிழ் படத்திலேயே தாயாக நடித்துள்ளார்.

    வித்தியாசம்

    வித்தியாசம்

    தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக உள்ள சாய் பல்லவி வித்தியாசமான வழியில் செல்கிறார். அட்ஜஸ்ட் செய்ய மறுப்பதால் தான் அவர் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன என்று கூறப்படுகிறது.

    English summary
    Sai Pallavi's Karu movie title has been changed as Diya. Diya is set to hit the screens on april 27. Sai Pallavi has acted as a mother of a girl in this movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X